districts

img

மக்களை திசைதிருப்பவே செல்ல நோட்டு அறிவிப்பு

கோவை, மே 20- ஒன்றிய மோடி ஆட்சியில் மக்கள் விழி பிதுங்கி  கிடக்கின்றனர்.  உழைக்கும் மக்களின் ஆவேசம் அரசுக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதற்கவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற  அறிவிப்பை ஒன்றிய மோடி அரசு  வெளியிட்டுள்ளதாக பி.ஆர். நடராஜன் எம்.பி., குற்றஞ்சாட் டினார்.  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நடைபெறும் நடைபயண இயக்கத்தை கோவையில் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். ஆவாரம்பாளையத்தில் இருந்து இப்பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து பி.ஆர்.நடராஜன்  எம்.பி., பேசுகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமப்படுத்தும் நடவடிக் கையை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் 7 மையங்களில் இருந்து  உழைப்பாளி மக்களின் நலனை  பாதுகாக்கும் நடவடிக்கையின்  ஒருபகுதியாக, இந்த நடைபயண  பிரச்சாரம் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு,  தொழில்  நெருக்கடியில் மக்கள் நேரடியாக  எதிர்கொள்கிற நிலையில். இந்த  பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்த உடன்  கருப்பு பணத்தை ஒழிக்கும்  நடவடிக்கையாக ரூ.1000  மற்றும் ரூ.500 நோட்டுக்களை  செல்லாது என அறிவித்தது.  இந்த பணமதிப்பிழப்பு நடவ டிக்கையால் மக்களும், சிறு  தொழில் புரிபவர்களும் கடும்  துன்பத்திற்கு உள்ளனார்கள்.  இந்த பணமதிப்பிழப்பு நடவடிக் கையை பல பொருளாதார  வல்லுநர்கள் எச்சரித்தனர். ஆனால், அதற்கு பல்வேறு சப்பைக்கட்டு காரணங்களை ஒன்றிய மோடி அரசும், சங் பரி வாரங்களும் முட்டுக்கொடுத்து பேசியது. தற்போது வெள்ளைப்  பணமாக உள்ள ரூ.2 ஆயிரம்  நோட்டுகளை திரும்பப் பெறு கிறோம் என அறிவித்துள்ளது.  மக்களை திசை திருப்பவே இந்த  செயலை மோடி அரசு செய் துள்ளது. பாஜக  பிரமுகர்களிடத் தில் பிடிக்கப்படுகின்ற கருப்பு பணம் குறித்து யார் கேள்வி எழுப் பினாலும், வாய் முடி மெளனம் சாதிக்கின்றது ஒன்றிய அரசு. மொரீஷியஸ் நாட்டிலிருந்து அதானி வங்கிக்கணக்கிற்கு வந்த  ரூ.20 லட்சம் கோடி பணத்தை பற்றிய தகவல்களை அமலாகத் துறை கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவில்லை.  உச்ச நீதிமன்றம்  கண்டித்த பின்னும் எந்த பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தலை கீழாக நின்றாலும் பாஜக வெற்றி  பெற முடியாது. அவ்வளவு துயரங் களை மக்கள் மீது சுமத்தியுள்ளது.  அந்த துயரங்களை எடுத்துரைத்து மக்களை ஒன்றிய அரசிடமிருந்து, விடுதலை செய்கின்ற பணியை சிஐடியு பிரச்சார நடைபயணம் செய்யும், என்றார்.