districts

img

புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பயிற்சி

உதகை, ஏப்.16- குன்னூர், தூதூர்மட்டம் விவசாயிகளுக்கு புதுப்பிக்க வல்ல ஆற்றல்‌ பயிற்சி நடைபெற்றது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ ஒருங்கி ணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ வேளாண்மை மற்றும்‌ வேளாண்‌ தொழிற்சாலைகளுக்கான ஆற்றல்‌ திட் டத்தின்‌ ஒரு பகுதியான ஆதிதிராவிடர்‌ உள்ளீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ புதுபிக்கவல்ல ஆற்றல்‌ சாதனங்கள்‌ பயிற்சி மற்றும்‌ கரு விகள்‌ வழங்கும்‌ நிகழ்ச்சி குன்னூர்‌ அருகே தூதூர்மட்டம்‌ கிரா மத்தில்‌ நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்கு நர்‌ எம்‌.ராதாகிருஷ்ணன்‌ தலைமை வகித்து ஒற்றை அடுப்பு, சூரிய மின்விளக்கு, சூரிய பூச்சிபொறி, சூரியதெளிப்பான்‌ மற்றும்‌ சூரிய உலர்த்தி ஆகியவற்றை 106 விவசாயிக ளுக்கு வழங்கினார்‌. நீலகிரி மாவட்டத்தின்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ வேளாண்‌  அறிவியல்‌ நிலையத்தின்‌ சார்பாக மணிவாசகம்‌‌ கலந்து கொண்டு, புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ குறித்த பயிற்சியும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித் தும்‌ விளக்கி கூறினார்‌. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ புதுபிக்க வல்ல ஆற்றல்‌ தொழிற்சாலையின்‌ பேராசிரியர்‌ ஆர்‌.மகேந்தி ரன்‌ இத்திட்டம்‌ குறித்து விரிவாக எடுத்துரைத்தார்‌. இறுதியில்‌ இணை பேராசிரியர்‌ கே.சந்திரகுமார்‌ நன்றி கூறினார்‌. பயிற் சிக்கு தூதூர்மட்ட பகுதியை சார்ந்த 100க்கும்‌ மேற்பட்ட விவ சாயிகள்‌ கலந்துகொண்டு பயன்‌ பெற்றனர்‌.