சேலம், மே 12- மாவட்ட ஆட்சியர் பயன்படுத்தும் வாக னத்தின் பராமரிப்புக்கூட உதிரிபாகங்கள் இல்லாத அவலநிலையை கண்டித்து தமிழ் நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தினர் சேலத் தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தானியங்கி பணிமனைகளில் தமி ழக அரசின் வாகனங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம். தற்போது அந்த துறையில் அரசு எந்த நிதியும் ஒதுக் காத சூழலில், பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே, என்ஜின் ஆயில் உள்ளிட்ட அனைத்து உதிரிபாகங் களையும் ஒட்டுமொத்த கொள்முதல் செய் திட வேண்டும். காலியாக உள்ள தொழில் நுட்ப துவக்க நிலை பணிகளை நிரப்ப வேண் டும். அனைத்து பதவிகளுக்குமான பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மோட் டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சேலம் அரசு தானியங்கி பணிமனை மண்டல துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வீ.குழந்தைவேலு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் செயலாளர் பி.சுரேஷ் உரையாற்றினார். இதில், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் வி.செல்வம், தொழில் பயிற்சி அலு வலர் சங்க மாநிலப் பொருளாளர் என்.திரு நாவுக்கரசு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் முருகபூபதி, சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பி.சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் பி.மணிவண்ணன், அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சண் முகம், இணைச் செயலாளர் சிங்கராயன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் சி.முருகப்பெருமாள் நிறைவுரை யாற்றினார். முடிவில், மாவட்ட பொருளா ளர் வீ.குமரன் நன்றி கூறினார்.