திருப்பூர், பிப். 9- திட்டம் யாரால் தொடங்கப்பட்டிருந் தாலும் அதற்கு முறையான நிதி ஒதுக் கீடு செய்து அதனை செயல்படுத்தியது திமுக அரசுதான் என திருப்பூரில் அமைச்சர் கே என் நேரு கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டப்பட்டுள்ள கும ரன் சாலையில் உள்ள மாநாட்டு அரங் கம், மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் நான்காம் குடிநீர் திட்டம் ஆகியவற்றை வரும் ஞாயிற்றுக்கிழமை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு துவக்கி வைப்ப தோடு, மாவட்டத்தின் பல்வேறு துறை களின் சார்பில் 5 ஆயிரம் பயனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதற்கான மேடை மற் றும் அரங்கம் அமைக்கும் பணி திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி மற் றும் நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு அதிமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு திறந்து வ ைப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு இது அர சின் தொடர் பணி, திட்டம் யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணியை முழுமை அடையச் செய்வது திமுக அரசு தான், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை அறிவித்ததோடு அதிமுக அரசு சென்று விட்டது. அதற்கு நில கையகப்படுத் துதல் முதல் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தியது திமுக அரசுதான். மேலும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் காலதாமதப்படுத்தப்படவில்லை. சில இடங்களில் விவசாயிகள் வாய்க்கா லில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சாமி நாதன் அத்திக்கடவு அவிநாசி திட்டத் தில் சில இடங்களில் விவசாயிகளுக் கான இழப்பீடு தொகையை அதிமுக அரசு வழங்காமல் சென்று விட்டது. அதனை வழங்கி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதா கவும், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் முழுமையாக திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.