தாராபுரம், மார்ச் 22 - தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக் கைகள் குறித்த எந்த அறிவிப்பு இல்லாததை கண்டித்து தாரா புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியி டப்படவில்லை. இதை கண்டித்து தாராபுரத்திலுள்ள அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள் ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட் டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் தலைமை ஏற்றார். செயலாளர் இல.தில்லையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.