மேட்டுப்பாளையம், டிச.31- மேட்டுப்பாளையத்தில் இருந்து உத கைக்கு செல்லும் மலை ரயில் போக்குவ ரத்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகைக்கு நீலகிரி மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமான இந்த மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்று பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளாமான சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். இந்நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் மலை ரயில் சேவை ரத்து செய்யப் பட்டது.
இதற்கிடையில், ரயில்வே சில தளர்வுகளை அறிவித்து நாடு முழுவ தும் சிறப்பு ரயில்களை இயக்கிய போ திலும் மலை ரயில் சேவை மட்டும் துவக் கப்படவில்லை. கடந்த 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த ரயில் சேவை நூற்றாண்டை கடந்த இதன் வரலாற்றில் இதுவரை இத்தனை மாதங்கள் தொடர்ச் சியாக நிறுத்தப்பட்டதில்லை. இதனால் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, டிச. மாத துவக்கத் தில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்த தனியார் நிறுவனம், வார விடுமுறை நாட்க ளில் மட்டும் கூடுதல் கட்டணத்துடன் ரயிலை இயக்க துவங்கியது. மேட்டுப்பா ளையத்தில் இருந்து உதகை செல்ல ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் என்றும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்ல ரூ. 2 ஆயிரத்து 500 என கட்ட ணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூல் வேட்டையில் இறங்கியது. இதையடுத்து, உலக பாரம்பரியமிக்க மலை ரயில் சேவையை தனியார் வசம் தாரைவார்த்து கொள்ளையடிப்பதற்கு கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், டிச.31 ஆம் தேதி முதல் வழக்கமான மலைரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக் கப்பட்டது.
அதேநேரம், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மலை ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற தகவலால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் புதனன்று துவங்கிய முன்பதி வில் டிக்கெட்டை பதிவு செய்ய துவங்கி னர். இதனையடுத்து ஒன்பது மாதங்க ளுக்கு பின்னர் வியாழனன்று மேட்டுப்பா ளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு உதகை நோக்கி மலை ரயில் புறப்பட்டது. மேலும், பொதுமக்க ளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதா லும், தற்போது ரயில்வே நிர்வாகம் வழக்க மான ரயிலை இயக்க துவங்கியதாலும் இனி வரும் நாட்களில் சர்ச்சைக்குரிய வகை யில் இயக்கப்பட்ட தனியார் வாடகை ரயில் இயக்கப்படாது என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.