உதகை, ஜூலை 21– மழை சமயத்தில் பொது மக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின் பற்ற வேண்டும். என நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட அறிக்கையில், நீலகிரியில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் அதிகளவு மழை பொழிவு இருப்பதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபா யம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன் னெச்சரிக்கைகளை பின் பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக் கள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகளை தவறாமல் பின் பற்ற வேண்டும். அதன்படி, அதிக மழை பொழிவு ஏற்படும் போது பொதுமக்கள் நீரோடை களுக்கு அருகில் செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அல்லது குழந்தைகளை வெள்ள நீரில் விளையாட அனுமதிக் கவோ கூடாது. ஓடும் நீரில் நடக்க வேண்டாம். ஏனெனில் நீரோட்டமா னது ஆழமற்றது போல் தோற்ற ளிக்கலாம். ஆனால், வேகமாக ஓடு கின்ற நீர் உங்கள் கால்களை இடறி விடலாம். அதேபோல், வேகமாக ஓடும் நீரில் நீந்த வேண்டாம். அந்நீரால் அடித்து செல்லப்படலாம் அல்லது நீரில் உள்ள பொருளிaன் மீது மோதிக்கொள்ள நேரிடலாம். மாவட்டத்தில் அதிக மழை பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணி களை தவிர மற்ற நேரங்களில் வெளியி டங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வாகனங்களை மரங்களின் அடியிலோ, தடுப்பு சுவர்களின் அருகிலோ நிறுத் துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப் படுகிறது. மேலும், பொதுமக்கள் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, 24 மணி நேரம் இயங் கும் கட்டுப்பாட்டு அறை எண் 1077 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்க வேண்டும். இதனைத்தவிர, உதகைகோட்டம் – 0423– 2445577, குன் னுார் கோட்டம் – 0423– 2206002, கூட லுார் கோட்டம் – 04262– 261295, உதகை வட்டம் – 0423– 2442433, குன்னுார் வட்டம் – 0423– 2206102, கோத்தகிரி வட்டம் – 04266 – 271718, குந்தா வட்டம் – 0423– 2508123, கூடலுார் வட்டம் – 04262– 261252 மற்றும் பந்தலுார் வட்டம் – 04262 – 220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.