districts

img

தமுஎகச சார்பில் புத்தகங்களோடு புத்தாண்டு இயக்கம்

அவிநாசி, ஜன.1 தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புத்தகங்களோடு புத்தாண்டை வர வேற்போம் என்கிற இயக்கம் வெகு  விமர்சையாக நடைபெற்றது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் அவிநாசி கிளை சார்பில் புத்தகங்களோடு புத் தாண்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை ஓய்வு பெற்ற ஆசி ரியர் சு.பாலகிருஷ்ணன் தலைமை யேற்று நடத்தினார். அவிநாசி கிளைச் தலைவர் ச.மு.ரமேஷ் குமார் வர வேற்று பேசினார். சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ப.விஜய் ஆனந்த், எழுத்தாளர் சம்சுதீன்ஹீரா, குறும் பட ஒளிப்பதிவாளர் பிரியா கார்த் திக் ஆகியோர் முன்னிலை வசித்த னர். முன்னதாக, இந்நிகழ்வில், புத் தாண்டை வரவேற்ற பாடகர் ரங்க ராஜ் கிராமிய பாடல்களையும், அஸ் வந்த் கீ போர்டு இசைத்தும் புத் தாண்டை வரவேற்றனர்.  இதனைத் தொடர்ந்து அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சமூகப் பணி செய்து வரும் அமைப் பிற்கும் நல்லது நண்பர் அறக் கட்டளை ரவிக்குமார், நடராஜ், பத் திரிகையாளர்களுக்கும், ஆசிரியர் சுசீலா, குறும்பட இயக்கம் மணி வண்ணன் ஆகியோருக்கு தமுஎ கச மாநிலத் துணைப் பொதுச் செய லாளர் லட்சுமி காந்தன், மாநில  செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்,  மாவட்டத் தலைவர் கணேஷ், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமி யப்பன், ஆகியோர்கள் புத்தகங் களை பரிசாக வழங்கி கௌரவித்த னர்.  இதனைத் தொடர்ந்து சிறுகதை நூல் ஆகாத தீதார் என்ற நூலினை சம்பத்குமார், ஆயிஷா ஆகியோர் அறிமுகம் செய்தனர். இதில் எழுத் தாளர் அமீனா முகமது ஏற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் தமிழ் சங்கம் விருது பெற்ற கிளிக் நாவலை நீரோடை மகேஷ், ஆசிரியர் மணவாளன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். எழுத்தாளர் மாதவராஜ் ஏற்புரை வழங்கினார். இறுதியாக வாசிப் பில் விரியும் வெளி என்ற தலைப் பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.லட் சுமி காந்தன் சிறப்புரையாற்றினார். முடிவில், விஜய் சுதாகர் நன்றி கூறி னார். இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.