districts

img

ஒன்றிய அரசின் புதிய வாகன திருத்த சட்டம்: திரும்பப்பெற வலியுறுத்தி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.18- ஹிட் அண்ட் ரன் என்ற புதிய வாகன  திருத்த சட்டத்தை முழுமையாக ஒன்றிய  அரசு திரும்ப பெற வேண்டும் என வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந் துள்ள புதிய வாகன திருத்த சட்ட மசோதாவில்  வாகன விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டு நர்களுக்கு 10 ஆண்டு சிறை அல்லது 7 லட்சம்  அபராதம் என்ற புதிய விதியை அமல்படுத்தி யுள்ளது. இந்த சட்டத்திற்கு அனைத்து தரப்பு  வாகன ஓட்டுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில், இந்த புதிய சட்டத்தை  ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். சாலை விதிகள் குறித்து பள்ளி  கல்வி பாடத்திட்டத்திலேயே சாலை விதி களை பின்பற்றிய பாடத்தை ஏற்படுத்த வேண் டும். ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும்  உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டு  உரிமை வழங்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஓட்டுனர்க ளுக்கு தேவையான பார்க்கிங் வசதி, மருத் துவ வசதி, ரெக்கவரி வாகனம், குளியல் மற் றும் கழிவறை வசதி, பாதுகாப்பு வசதிகள் அவசியம் இருக்க வேண்டும் உள்ளிட்ட பத்து  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக  நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.