ஈரோடு, நவ.7- ஈரோட்டில் ரூ.80.26 கோடி மதிப்பிலான துணை மின் நிலையத் தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின், எரிசக்தித்துறை சார்பில் ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப் பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட் டினை தொடங்கி வைத்தார்.
மேலும், 8 புதிய துணை மின்நிலையங்களுக் கும் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சி யின் காரணமாக அதிகரித்து வரும் மின்தேவைக்கு ஏற்றவாறு மக்களுக் கு தடையின்றி மின்சாரம் கிடைக்க செய்யும் உயரிய நோக்குடன், கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல், சீரான மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை, தமிழ்நாடு மின்தொ டரமைப்பு கழகம் மற்றும் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வாயிலாக அரசு செயல்ப டுத்தி வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் ரூ.80 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230 கி.வோ தரம் உயர்த்தப்பட்ட வளிம காப்பு துணை மின்நிலையத்தை காணொலி காட்சி வாயிலாகத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இடம் பற்றாக் குறை உள்ள பகுதிகளில் இந்த வகை துணை மின் நிலையங்கள் அமைக் கப்படுகிறது. இவ்வகை மின் நிலை யத்திற்கு நான்கு மடங்கு கூடுதல் செலவாகும். ஆனால் பராமரிப்பு செலவு மிகக்குறைவாகும். இது சென்னைக்கு அடுத்து ஈரோட்டில் 70 சென்ட் நிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் பயனடைவர். இந்நிகழ்ச்சியினைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு தலைமை மின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தினை பார்வையிட்டார். இதில், மாநகராட்சி மேயர் சு.நாகரத் தினம், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், மின்வாரிய தலைமை பொறியாளர் (பொ) இந்தி ராணி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.