districts

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம்

செங்கல்பட்டு, நவ.17- காஞ்சிபுரம் மாவட்ட த்தை இரண்டாகப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தை  தலைமை இடமாகக்  கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என ஜூலை மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தது.  இதனைத் தொடர்ந்து இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 29ஆம் தேதி முதல் புதிய மாவட்டம் செயல்படும் எனவும், செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவல கத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. அதனைத் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாவும்  கூறப்படுகிறது. இந்நிலையில் புதியதாக உருவாக்கப்பட்டுள் செங்க ல்பட்டு மாவட்டத்திற்கு  காஞ்சிபுரம் மாவட்ட த்தில் மாவட்ட கண்காணி ப்பாளராக பணியாற்றும் டி.கண்ணனை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்னை சைபர் கிரைம் சிபிசிஐடி கண்காணிப்பாளராக பணி யாற்றிவரும் பி.சாமு ண்டீஷ்வரி நியமிக்கப்பட்டு ள்ளார்.