உடுமலை, மே 3- அமராவதி நகர் சைனிக் பள்ளியில் புதிய முதல்வராக கேப் டன் மணிகண்டன் பொறுப்பேற்றுள்ளார். சைனிக் பள்ளியில் புதிதாக பொறுப்பேற்ற கேப்டன் மணி கண்டன் கடந்த, 2005 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் பணி யில் சேர்ந்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஐ.என்.எஸ்., சில்கா பயிற்சி மையத்தில் கல்வி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். மேலும், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுாரி, கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் எழிமலை இந்திய கடற்படை அகாடமியில் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பள்ளி முதல்வ ருக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்த னர்.