districts

ஊதியம் பெறாத தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்துவதா?

திருப்பூர், செப்.13 - புதிய இந்தியா எழுத்தறிவுத் திட் டத்தில் வேலை செய்யும் கல்விப் பணி யாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் பெறாத தன்னார் வலர்களைக் கொண்டு இந்த  மாபெரும் திட்டத்தை அமல்படுத்து வது ஏற்புடையது அல்ல என்று கல்வி  மேம்பாட்டுக் கூட்டமைப்பு கூறி யுள்ளது. இது தொடர்பாக கல்வி மேம் பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சு.மூர்த்தி சனியன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: நாட்டில் எழுத்தறிவுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. எனினும் 2021ஆம் ஆண்டு  வரை 77.70% மக்கள் மட்டுமே எழுத் தறிவு பெற்றுள்ளதாக தேசிய புள்ளி யில் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றும் ஐந்தில் ஒருவர் எழுத்தறிவு பெறாமல் உள்ளனர். இந்நிலையில், பதினைந்து வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கொடுக்க “புதிய இந்தியா எழுத் தறிவுத் திட்டம்” 2022 முதல் 2027  வரை ரூ.1037.90 கோடி நிதி ஒதுக்கீட்டில்  தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.700 கோடியை ஒன்றிய அரசும், ரூ.337.90 கோடியை மாநில அரசுகளும் ஒதுக் கீடு செய்ய உள்ளன. இத்திட்டம் தேசியக் கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரைப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ் நாட்டிலும் இத்திட்டம் கடந்த ஆண்டி லிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணித அறிவு மட்டுமல்லாமல் வாழ்க் கைத் திறன்கள், டிஜிட்டல் கல்வி யறிவு, சட்டம், சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப நலன், உள்ளூர் வேலை வாய்ப்புக்கான தொழில் திறன்,  கலாச்சாரம், விளையாட்டு, பொழுது போக்கு போன்றவையும் எழுத்தறிவுத் திட்டம் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், மிகப்பெரிய குறிக்கோள் களைக் கொண்டுள்ள இத்திட்டத்தை  ஊதியம் இல்லாமல் தன்னார்வத்  தொண்டு செய்ய விருப்பமுள்ளவர் கள் மூலம் செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் இத் திட்டப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்களின் வழக்கமான பள்ளிப் பணிகளும் பாதிக் கப்படும் சூழல் உள்ளது. ஊதியம் பெறாத தன்னார்வலர் களைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தினால் அனைவருக்கும் எழுத்தறிவு எனும் குறிக்கோளை அடைய முடியாது. மேலும் இப்பணியி லிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் களை விடுவித்து, வாட்டார அளவில் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2030க்குள் அனைவருக்கும் எழுத் தறிவு கொடுக்க வேண்டும் என்று ஐ.நா.  அவை 2015ஆம் ஆண்டில் அறிவித்தது.  எல்லா நாடுகளிலும் இதற்கான முயற்சி கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட் டுள்ளன. நாமும் இந்தக் குறிக்கோளை  அடைய போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிர்வாகச் செலவு களுக்கு மட்டுமே 1037.90 கோடியை ஒதுக்கிவிட்டு ஊர் தோறும் எழுத்தறிவு  கொடுக்கும் களப் பணியாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி ஒதுக்காதது  ஏற்புடையதல்ல. மேலும் வேலை யின்மை, போதிய வருவாயின்மையால் கோடிக்கணக்கான படித்த இளைஞர் கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசும், மாநில அரசும் எழுத்தறிவுத் திட்டத்தை குற்றம் குறையில்லாமல் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.