districts

img

உடுமலைக்கு புதிய ஆணையாளர்: நகரின் சாலைகள் சரி செய்யப்படுமா?

உடுமலை, பிப்.20- புதிய ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பால முருகன் உடுமலை நகரில் குண்டும் குழியுமாக காணப்படும்  சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  உடுமலை நகரம் 33 வார்டுகளில் சுமார் 70 ஆயிரம் மக்கள்  தொகை கொண்ட நகரமாக உள்ளது. இந்த நகரை சுற்றி யுள்ள கிரமங்களில் உள்ள மக்கள் இங்கு உள்ள அரசு மருத் துவமனை, தினசரி சந்தை, பேருந்து நிலையம் மற்றும் ரயில்  நிலையம் எனக் கிராம புற மக்கள் உடுமலை நகருக்கு வந்து  செல்கின்றனர். இந்நிலையில், இணைப்பு சாலைகள் அனைத் தும் குண்டும் குழியுமாக உள்ளன. மேலும், 2013 ஆம் ஆண்டு  சுமார் 56.5 கோடியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட மும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. நகரின்  முக்கிய பகுதிகளில் சாக்கடை நீர் சாலைகளில் செல்கிறது. சாக்கடை குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும்,  நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் மனமகிழ்  மன்ற கட்டிடத்தை மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு  பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புதிய ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பாலமுருகன் இக்கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.