ஈரோடு, ஜன.3- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட 11 ஆவது மாநாடு ஞாயிறன்று ஈரோடு ரங்கம் பாளையம் கலைக் கல்லூரியில் மாவட்ட தலைவர் வித்யா தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை பேராசிரியர் முனைவர் மணி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலா ளர் சங்கர் அறிக்கையை முன்வைத்து பேசினார். இதை யடுத்து ஈரோடு மாவட்ட தலைவராக ஆர்.எம்.சுப்பிர மணியம், மாவட்ட செயலாளராக செ.கார்த்திகேயன், பொருளாளராக சங்கர், துணை தலைவர்களாக வித்யா, சரவணன், இணைச் செயலாளர்களாக முரளி கார்க்கி, பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் க. ராஜ்குமார் நிறைவுரையாற்றினார். சரவணன் நன்றி கூறினார்.