திருப்பூர், ஜன.23- திருப்பூர் அனுப்பர்பாளையம் வட்டார பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை சுமூகமாகத் தொடங்கியது. திருப்பூர் முழுக் கூலி பாத்திரப்பட்டறை தாரர் சங்க கட்டிடத்தில் திங்களன்று காலை 10.30 மணி முதல் எவர்சில்வர் பாத்திரப் பட் டறை உரிமையாளர்களுடன் ஒரு மணி நேர மும், அதைத் தொடர்ந்து 11.30 மணி முதல் பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க நிர்வாகி களுடன் ஒரு மணி நேரமும் தொழிற்சங்க கூட் டுக் கமிட்டியினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். சிஐடியு, எல்பிஎப், ஏடிபி, ஏஐடியுசி, காமாட்சி அம்மன் உலோக பாத்திர தொழி லாளர் சங்கம், எச்எம்எஸ், ஐஎன்டியுசி மற்றும் பிஎம்எஸ் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சம்பளப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பளப் பேச்சுவார்த்தை நடத்தி தொழி லாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்த நிலையில், பாத்திர உற் பத்தியாளர் தரப்பில் ஓராண்டு காலம் ஒத்தி வைத்து கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். எனினும் பாத்திரத் தொழிலாளர் சங்கங்கள் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி உரிய சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து முதல் கட்டமாக திங்களன்று இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் திருப்பூர் பித்தளை பாத்திர வியா பாரிகள் சங்கம் சார்பாக முத்தையா, ஜீவா னந்தம், முத்துக்குமார், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், திருப்பூர் முழு கூலி பாத்திரப் பட்டறைதாரர்கள் சங்கம் சார்பாக மணி, வேலுச்சாமி, குமாரசாமி, சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை யில் கலந்து கொண்டனர். சிஐடியு சார்பாக ரங்கராஜ் மற்றும் குப்பு சாமி, எல்பிஎப் சார்பாக வேலுச்சாமி மற்றும் ரத்தினசாமி, ஏடிபி சார்பாக தேவராஜ், ஏஐடி யுசி சார்பாக செல்வராஜ் மற்றும் நாகராஜ், காமாச்சியம்மன் உலோக பாத்திர தொழிலாளர் சங்கம் சார்பாக முத்து கிருஷ் ணன் மற்றும் அர்ஜுனன், எச்எம்எஸ் சார்பாக பாண்டியராஜன், ஐஎன்டியுசி சார்பாக கணே சன், பிஎம்எஸ் சார்பாக ஸ்ரீனிவாசன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய நிர்வாகிகள் பங் கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் சம்பளப் பேச் சுவார்த்தைக்காக கூட்டுகுழு உருவாக்கப்பட் டது. இதன் கெளரவ தலைவராக காமாட்சி யம்மன் சங்கத்தின் முத்து கிருஷ்ணன், தலை வராக எல்பிஎப் வேலுச்சாமி,செயலாளராக சிஐடியு ரங்கராஜ்,பொருளாளராக ஏ.டி.பி தேவராஜ்,துணைத் தலைவராக ஐஎன்டியுசி ஈஸ்வரன், துணைச் செயலாளராக ஏஐடிசியு செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். அடுத்தகட்ட சம்பளப் பேச்சுவார்த்தை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாகத் தொடங்கியுள்ளதாக தொழிற் சங்கங்கள் கூட்டுக்குழு செயலாளரும், சிஐ டியு மாவட்ட செயலாளருமான கே.ரங்கராஜ் கூறினார்.