திருப்பூர், அக்.24 - திருப்பூர் அருகே பொங்குபாளை யம் ஊராட்சியில் பயன்படுத்தப்படாத கல் குவாரியில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக் கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரி கள், கனிம துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை, காவல்துறை உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அத்துடன் பொங்குபாளையம் ஊராட்சி தலைவர், தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். இதில் திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம், பொங்குபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளம்பாளையம் - பள்ளிபா ளையம் பகுதியில் உள்ள காலாவதி யான கல் குவாரியில் குப்பை கொட்ட அனுமதிக்க வேண்டும், அறிவியல் முறைப்படி அந்த இடத்தை தூய்மை யாக பராமரிப்போம் என்று தெரிவிக்கப் பட்டது. எனினும் பொதுமக்கள் சார்பில் பேசியவர்கள் கடந்த கால அனுப வத்தை முன்வைத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே 2015-2016 ஆண்டுகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதை தடுத்த அனுபவமும், தற்பொழுது அதே நிலை மாநகராட்சி குப்பை பரா மரிப்பில் நடைபெறுகிறது. மீண்டும் அதே நிலை நீடிக்கிறது என்றும் கூறப் பட்டு, அன்றும் பொது மக்கள் போராட் டம் முன்னெடுத்து தடுத்து நிறுத்தப் பட்டது. இன்றும் அதே நிலை வந்தால் அதனையும் செய்யத் தயாராக இருப்ப தாக தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மாசுக் கட் டுப்பாட்டு வாரிய தரப்பில் குப்பையை கொட்டக் கூடாது, கம்போஷ் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. கனிம துறை சார்பில் காலாவதியான கல்குவா ரியில் மீன் பண்ணை, சுற்றுலா, மழை நீர் தேக்கும் பகுதி போன்ற வகையில் மட் டுமே பயன்படுத்த முடியும் என்று தெரி விக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தின் குப்பை கொட்டும் கோரிக்கை பெரும் பான்மையினரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த கூட்டம் முடிவு காணப்படாமல் தோல்வி அடைந்தது.