திருப்பூர், மே 6- ஓடக்காடு மதுபான விடுதியை அகற்றும் பிரச்சனை தொடர்பாக அதி காரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் ஓடக்காடு பகுதியில் உள்ள ராயல் பார் என்ற மதுபான விடு தியை அங்கிருந்து அகற்ற கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இந்த நிலை யில் வியாழனன்று திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாலக்காடு பகுதி யின் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பங்கேற் றனர். அத்துடன் ராயல் பார் மதுபான விடுதி உரிமையாளரும், அந்த கட்டிட உரிமையாளரும் இதில் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் இந்த மதுபான விடுதி அகற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மதுபான விடுதி உரிமையாளர் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வழங் கும்படியும், அதன்பிறகு இங்கிருந்து அகற்றி கொள்வதாகவும் தெரிவித் துள்ளார். ஆனால், இதற்கு ஓடக்கான் பகுதி பொதுமக்கள் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். கடந்த ஐந்தாண்டு காலத்தில் இதே போல் பல முறை கால அவகாசம் கேட் டுள்ளனர். கால அவகாசம் பெற்றுக் கொண்டும் வழக்கம் போல் தொடர்ந்து மதுபான விடுதியை செயல்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஓடக்காடு பகு தியில் பொதுமக்களுக்கு இடையூ றும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருவதுடன் விரும்பத்தகாத சமூக விரோத செயல்களும் நடை பெறும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இனியும் கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது. உடனடியாக அங்கி ருந்து மதுபான விடுதி அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அங்கு மதுபான விடுதி செயல்படாமல் மூடி வைத்திருப்பதை மாவட்ட நிர்வா கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த வருவாய்த்துறை அதிகாரி கள் இந்தப் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன்படி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதே சமயம் மக்கள் கருத்தின்படி இந்த விடுதி செயல்படாமல் தற்காலிகமாக மூடப் பட்டிருக்கும் என்றும் உறுதி அளித்த னர்.