திருப்பூர், மே 4- திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு 4 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 2619 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேசிய தேர்வு முகமை சார்பில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறு கிறது. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடி கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. வித்யாசாகர் பப்ளிக் பள்ளியில் 720 பேரும், ஏ.வி.பி. கல்லூரியில் 720 பேரும், லிட்டில் கிங்டம் பள்ளியில் 672 பேரும், கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் 507 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 619 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். நீட் தேர்வு மையங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான மனோகரன், நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். தேர்வு மையங்களில் தடை யில்லா மின்சாரம், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மருத்துவக்குழு, ஆம்பு லன்ஸ் வசதி, சுகாதார ஏற்பாடுகளை செய்து தரும்படி மாவட்ட நிர்வாகத் திடம் கேட்டுள்ளனர். தேர்வு மையத் துக்கு மாணவர்கள் இடையூறு இல்லா மல் வந்து செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு மாநகர, மாவட்ட காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத் தில் பெற்றோருக்கு காத்திருப்பு பகுதி, வாகன நிறுத்துமிட வசதிகள், உணவு, குடிநீர் போன்ற அதியாவசிய தேவை கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு மாணவர்கள் நல்ல மனநிலை யில் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.