நாமக்கல், ஜூலை 9- பள்ளி செல்ல ஏதுவாக பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஜங்கம நாயக்கன்பட்டி கிராமத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித் துள்ளதாவது, பரமத்தி வேலூர் வட்டம் பரமத்தி ஒன்றியம் வில் லிபாளையம் கிராமம் ஜங்கம்மநாயக்கன்பட்டி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. எங்கள் கிராமப் பகுதி யில் இருந்து பரமத்திக்கு எட்டு கிலோ மீட்டரும், பிரதான சாலை எர்ணாபுரத்திற்கு 12 கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளிகள் அமைந்துள்ளது. மேலும், ஜங்கமாநாயக்கன் பட்டியில், 8,10,11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் உள்ளனர். இப்பகுதியில் முறையான பேருந்து வசதிகள் இல்லாததால், சுமார் 60 மாணவ மாணவிகள் தனியார் வாக னங்களில் அதிக கட்டணம் செலுத்தி பள்ளிக்குச்செல்லும் நிலை உள்ளது. இதனால், பட்டியலினத்தை சேர்ந்த மாண வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பள்ளி சென்று வர ஏதுவாக பேருந்து வசதியினை, ஏற்படுத்தி தர வேண்டும். மாணவ மாணவியரின் சிரமங்களை போக்கிடும் வகையில், காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லவும், பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் திரும்பி வரவும் உரிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆட்சி யரிடம் மனு அளிக்கையில், சிஐடியு நாமக்கல் மாவட்டச் செய லாளர் என்.வேலுச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் நாமக் கல் மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ், ஆகியோர் உடனி ருந்தனர்.