திருப்பூர், நவ.22- தற்போது பரவி வரக்கூடிய காய்ச் சல் மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் தான், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அரசு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது என மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், பெருமாநல் லூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவம னையில் புதிதாக ரூ.3.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 கட்டடங்களைச் செவ்வாயன்று திறந்து வைக்க வந்தி ருந்த, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட் டங்களில் தற்போது பரவி வரக்கூடிய காய்ச்சல் மழைக்காலங்களில் பரவக்கூ டிய வைரஸ் காய்ச்சல் தான், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் படிப்படியாக தற்போதுள்ள பாதிப்புக ளும் குறைக்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு இதுபோன்ற காய்ச்சலுக்கு அதி கபட்சமாக 66 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு வருடம், வருடம் அந்த எண் ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட பணி களின் காரணமாக இதுவரை 6500 பேருக்கு மட்டுமே காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் வாரத்திற்கு ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரு கிறது. இதுவரை நடத்தப்பட்ட முகாமில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரை பரி சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர் களில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட் டவர்கள் உரிய சிகிச்சைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இன்னும் ஆறு வாரம் இந்த தொடர் முகாம் நடைபெறும். தமி ழக மருத்துவ வரலாற்றிலேயே வடகி ழக்கு பருவமழையை முன்னிட்டு 10 தொடர் மருத்துவ முகாம்கள் நடத்து வது இதுதான் முதல் முறை. திருப்பூ ரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மையம் இந்திய நாட்டிற்கு வழிகாட்டும் வகையில் அமையும் என்று கூறினார். இந்நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் நாடளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் உட்பட மருத்துவர் கள், செவிலியர்கள் உட்பட அரசு அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.