districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நாவரசு படுகொலை ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை, அக். 21 - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி யிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவர் நாவரசு 1996 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே  உலுக்கிய இந்த விவகாரத்தில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1998-ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எனினும், கடலூர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால், கைது செய்யப்பட்ட ஜான் டேவிட், தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் சுகாதார சேவை இயக்குநர் எச்சரிக்கை

சென்னை, அக். 21-  யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற வீடியோவை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும்  நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்க வேண்டுமென மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெ. ராஜமூர்த்தி கூறியுள்ளார். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகி யோர் தான் தொப்புள் கொடி அறுக்கும் பணியைச்செய்ய வேண்டும். இர்பான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. மேலும், சம்பவத்தின் போது இர்பான் முழுக்கை சட்டை அணியவில்லை என்பதால், குழந்தைக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் பெறப்பட்டதும் தங்கள் துறை சார்ந்த நடவடிக்கை தொடரும் எனவும் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெ. ராஜமூர்த்தி கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு தீவிர புயலாக மாறுகிறது

சென்னை, அக்.21- மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல்  பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.  மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து  மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள  இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 22-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.23-இல்  மேலும் வலுப்பெற்று புயலாகவும் மாறும் என எதிர்பார்க் கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறும் பட்சத்தில் கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயர் சூட்டப்படும்.  இந்தப் புயல், அக்டோபர் 25 அன்று அதிகாலை  ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக  கரையைக் கடக்கக் கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இது என்பது  குறிப்பிடத்தக்கது.  எனினும் இந்த புயல் தமிழக கடற்கரைப் பகுதியை விட்டு  விலகி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால்,  தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே வடதமிழக கடலோரப்  பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமையன்று (அக்.22) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்

தருமபுரி, அக்.20- பாலக்கோட்டில் புகையிலை பொருட்களை விற்ற கடை  உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் அபராதம் விதித்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவு  பாதுகாப்பு துறையினர் பாலக்கோட்டில் பல்வேறு பகுதிக ளில் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்து நிலையம் மற்றும்  எதிரில் உள்ள பள்ளி கூடத்தான் தெரு உள்ளிட்ட பகுதி களில் உள்ள சிறு மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும்  உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டன. தக்காளி மார்க்கெட்  பகுதியில் ஒரு டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரி கள், கடை உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம் விதிக்கப் பட்டு, மறு உத்தரவு வரும் வரை கடை திறக்கக்கூடாது என  எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர். இதேபோல், பாலக் கோடு புறவழிச்சாலை, காவப்பட்டி பிரிவு ரோடு பெட்ரோல்  பங்க் அருகில் ஒரு பெட்டி கடைக்கும் ரூ.25 ஆயிரம் அபரா தம் விதிக்கப்பட்டு, கடை இயங்க தடை விதிக்கப்பட்டது.

சிபிஎம் கிளை செயலாளர்கள் தேர்வு 

தருமபுரி அக்-21,  தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை மாநாடுகள் நடைபெற்றது கூட்டத்தில் புதிய கிளை  செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இண்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட கொணப்பள்ளம் ஏ. கிளைசெயலாளராக எம்.தேவராஜ், பி.கிளைசெயலாளராக சி.சேகர், குப்புசெட்டிப்பட்டி கிளைசெயலாளராக கே. சிவலிங்கம், பழைய இண்டூர் கிளைசெயலாளராக நீலமே கம், சிறுகளூர் கிளைசெயலாளராக கே. ஜெய லட்சுமி, பூச் செட்டி அள்ளி கிளைசெயலாளராக கோவிந்தசாமி, ராமர்  கூடல் கிளைசெயலாளராக முருகேசன், பச்சிளையான் கொட்டாய் கிளைசெயலாளராக எம். முனியப்பன், தளவாய்  அள்ளி கிளைசெயலாளராக ஆர். முருகேசன், பங்கு  நத்தம் கிளைசெயலாளராக எம். முனுசாமி, சின்னப்பள்ளத் தூர் கிளைசெயலாளராக கே. ராஜி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கே.என்.  மல்லையன் பகுதிக்குழு செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

மொரப்பூர் ஒன்றியக் குழு கிளை மாநாடுகள்

மோட்டூர் கிளைசெயலாளராக பொன்ராஜ், ஜடை யம்பட்டி ஏ. கிளைசெயலாளராக எம்.ராமன், பி.கிளைசெய லாளராக கே.முருகன், பொம்பட்டி கிளைசெயலாளராக ஆர். ஞானசேகரன், ராமாபுரம் கிளைசெயலாளராக சி.கோவிந்த சாமி, புதுக்காடு கிளைசெயலாளராக வி.கந்தசாமி, பெரியார் நகர் கிளைசெயலாளராக ஏ.இந்திராணி, கோமாளிப்பட்டி கிளைசெயலாளராக பி.தங்கராஜ், மொரப்பூர் கிளை செயலாளராக என்.ஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ. குமார், மாநிலக்  குழு உறுப்பினர் ஆர். சிசுபாலனின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மல்லிகா ஒன்றிய செயலாளர் கே. தங்க ராஜ் மற்றும் கர்ணன், ராமன், ஞானசேகரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். 

பென்னாகரம் நகரக்குழு கிளை மாநாடுகள்

நீர் குந்தி ஏ கிளைசெயலாளராக செல்வம் பி. கிளை செயலாளராக முருகன் எம்.கே.நகர் கிளைசெயலாளராக மாது, அம்பேத்கர் நகர் கிளைசெயலாளராக சக்தி, பெரியார்  நகர் கிளைசெயலாளராக குபேந்திரன், போடூர் கிளை செயலாளராக ராமமூர்த்தி, சுண்ணாம்புகாரத்தெரு கிளை செயலாளராக பாலமுருகன், இந்திரா நகர் கிளைசெயலாள ராக ஜி.ஆறுமுகம் முள்ளுவாடி கிளைசெயலாளராக அழகே சன், கோடியூர் ஏ.கிளைசெயலாளராக எம்.சண்முகம் பி. கிளைசெயலாளராக ஜி. சிவன் சி.கிளைசெயலாளராக  ஆர். ராகுல் ஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் மாவட்டக் குழு உறுப்பினர் சி. ராஜி, நகர செயலாளர் வெங்கடாச்சலம் ஆகி யோர் பங்கேற்றனர்.

100 கிலோ இறைச்சி பறிமுதல்

நாமக்கல், அக். 21- பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் உள்ள இறைச்சிக்கடையில் கெட்டுப்போன இறைச்சி இருப் பதை கண்டறிந்த உணவு பாதுகாப்த்துறை அதிகாரிகள் பறி முதல் செய்து அழித்தனர்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங் கோட்டில், இறைச்சிக் கடையில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி ஆட்டுக்குடல் கோழிக்கறிகள் விற்பனை செய்யப் படுவதாகவும், செம்மறி ஆட்டுக்கறியில் வெள்ளாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்  வந்துள்ளது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரங்க நாதன் சம்பந்தப்பட்ட இறைச்சி கடையில் திங்களன்று திடீர்  சோதனை மேற்கொண்டார். பின்னர், அங்கிருந்த குளிர்சா தன பெட்டியில் பாலிதீன் கவரைக் கொண்டு ஆட்டுக்கறி மற்றும் ஆட்டின் குடல் உள்ளிட்ட இறைச்சிகள் இருந்தது  தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன சுமார் 100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப் பற்றி, பள்ளிபாளையம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அழித்தனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக இந்த கடைக்கு ஆட்டுக்குடல் ஆட்டு இறைச்சிகள் கொண்டு வந்து, விற்பனை செய்யப்படு வதாக ஏற்கனவே அதிகாரிகள் எச்சரித்த நிலையில், தற் போது புகாரின் பேரில் 100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

சேலம், அக்.21- சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார்  பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக  பயணிகள் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம், ஆத்தூரிலிருந்து ஞாயிறன்று காலை,  வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி ஒரு தனியார் பேருந்து  சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளாளகுண்டம் இணைப்பு சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பேருந்து, சேலம் சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு  நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் இரு பேருந்து ஓட்டு நர்கள் மற்றும் ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து  நடத்துநர் ஆகியோர் காயமடைந்தனர். ஆத்தூரில் இருந்து  வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்திய தால், 50க்கும் மேற்பட்ட பயணிகளும் காயமின்றி நல்வாய்ப் பாக உயிர் தப்பினர். இவ்விபத்தால், சேலம் - சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு தலைமையிலான காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காய மடைந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்த னர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர், அக்.21- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பகுதி யைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்துள் ளார். அப்போது சிறுமியின் வளர்ப்பு தந்தையான கோவையைச் சேர்ந்த 38 வயது வாலிபர், சிறுமிக்கு பாலியல்  தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரி டம் தெரிவித்தார். இதுதொடர்பாக பல்லடம் மகளிர் காவல்  நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வளர்ப்பு தந்தையை  போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த னர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சனி யன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வளர்ப்பு தந்தைக்கு 5 ஆண்டு கடுங் காவல் சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி  ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளால்  தொடர் விபத்துகள்: வாகன ஓட்டிகள் புகார்

உடுமலை, அக்.21-  போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலை யில் ஏற்பட்டுள்ள குழிகளால் தொடர் விபத்து கள் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள்  புகார் கூறுகின்றனர். உடுமலையில் இருந்து மூணார் செல்லும் சாலையில் போடிபட்டி முதல் அமராவதி  வரை சாலைகளில் குழிகள் ஏற்பட்டுள்ளன.  இந்த குழிகளால் வாகனத்தில் வருபவர்க ளுக்கு விபத்து ஏற்படுகிறது. இச்சாலை  வழியாகத்தான் உடுமலை அருகே நடை பெற்று வரும் தேசிய நெடுச்சாலை பணிக ளுக்காக, கனரக வாகனங்கள் மூலம் அமரா வதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் இருந்து கிராவல் மண் எடுத்துச் செல்லப் படுகிறது. மேலும் இந்த லாரிகளை எந்த அனு பவமும் இல்லாமல் ஓட்டுநர்கள் போக்குவ ரத்து விதிகளை மதிக்காமல் கிராவல் மண்னை சாலையில் சிதறவிட்டுச் செல்வ தால் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அறிவிப்பு பலகைகள் இல்லாமல் பல இடங்களில் வேகத்தடைகள் உள் ளன. மேலும் சாலையில் பல இடங்களில்  உள்ள குழிகளாலும் தொடர் விபத்துகள் ஏற்ப டுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள்  தெரிவிக்கையில், இச்சாலை வழியாகத் தான் அமராவதி அணை, திருமூர்த்தி மலைக்கு செல்ல வேண்டும், பல கல்வி நிலை யங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற் சாலைகள் மற்றும் கேரள மாநிலம் செல்ல  என தினமும் ஆயிரக்காணக்கான வாகனங் கள் இதில் சென்று வருகிறது. இதனால்,  தற்போது போக்குவரத்து நெரிசல் அதிக மாக ஏற்பட்டு வருகிறது. அதிக மக்கள் பயன் படுத்தும் சாலை முறையாக பராமரிக்கப்படா மல் இருப்பது கவலை தருகிறது. பல  இடங்களில் குழிகள் ஏற்பட்டும், சாலையின்  ஓரத்தில் செடிகள் வளர்ந்து உள்ளதால்  தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதிக  மக்கள் பயன்படுத்தும் இந்த சாலையை  உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பெண்களை ஏற்றாமல் சென்ற புறநகர பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், அக். 21 - பெண்களை பேருந்தில் ஏற்றா மல் சென்றவர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐ டியு கைத்தறி நெசாவளர் சங்க மாவட் டச் செயலாளர் என்.கனகராஜ் புகார்  கூறியுள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு: தாராபுரம் அரசு போக்குவரத்து கழக  கிளையிலிருந்து  இயக்கப்படும் 15  ஆம் நம்பர் நகரப் பேருந்து, தாராபுரத் தில் இருந்து தாசநாயக்கன்பட்டி வரை சென்று திரும்புகிறது. திங்க ளன்று மாலை 6:30 மணி அளவில்,  சத்யா நகர் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக நின்று கொண் டிருந்த பொழுது, பேருந்தை நிறுத்தா மல் பேருந்து ஓட்டுநர் வந்துவிட்டார்.  பேருந்தின் ஊர்ப் பெயர் பலகையில் விளக்கு இல்லை, தமிழக அரசு கட் டணமில்லா பேருந்து பயணம் என நடைமுறைப் படுத்தினாலும், சில ஓட் டுநர்கள் இதுபோல் இழிவாக நடந்து  கொள்கின்றனர். இது குறித்து முறையான விசா ரணை மேற்கொண்டு 15 ஆம் நம்பர்  நகர பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது முறையாக விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக என்.கனகராஜ்  கூறியுள்ளார்.