உடுமலை, ஏப்.1- மண்ணுக்கும் மனிதனுக்கும் பல நன்மைகளை தரும் இயற்கை வேலிகளை பாதுகாக்க, அதன் நன்மைகளை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும் என இயற்கை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். விவசாய விளை நிலங்களின் ஓரங்களில் மண்ணுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாத கற்றாழை, முள்கிழுவன், பிரண்டை மற்றும் அதிகம் வளர்ச்சி இல்லாத முள் செடிகள் வளரும். இயற்கையாக அமைந்த இந்த வேலிகள் உயிர் வேலி என்று அழைக்கப்பட்டது. இந்த வகை வேலிகளால் கால்நடைகள் எந்த ஆபத்தும் இல்லை. மேலும் விவசாய நிலங்களில் தண் ணீர் இருப்பை பாதுக்காக்க உதவியது. இதனால், பல நம்மை கள் விளைநிலங்களுக்கு கிடைத்தது. தற்பொழுது இவற்றை அழித்து இரும்பு கம்பிகளை கொண்டு வேலிகளை அமைத்து வருகிறார்கள். இதனால் கற்றாழை, முள்கிழுவன் போன்ற தாவரங்கள் இல்லாமல் போகும் நிலையில் உள்ளது. இயற்கை வேலியாக இருந்த தாவரங்கள் இருந்த இடத்தில் பள்ளங்களில் மட்டுமே காணப்படுகிறது. இது போன்று பள்ளங்களில் இருக்கும் இந்த தாவரங்க ளில் நன்மைகளை இன்றைய விவசாயிகளுக்கு தெரியப்ப டுத்தும் வகையில், வேளாண்துறை பிரச்சாரம் செய்ய வேண் டும் என்று இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.