சேலம், ஜூலை 7- தேசிய அளவிலான போட்டியில் சேலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த ராகுல் இளைஞர் நல விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, முதலிடம் பிடித்ததனர். இதில் மூன்று பெண்கள் இந்திய பெண்கள் கிரிக் கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா ஞாயிறன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. ராகுல் இளைஞர் நல விளை யாட்டு மேம்பாட்டு மற்றும் தற்காப்பு கூட்டமைப்பின் தலைவர் விஜய்லட்சுமனண் தலைமை வகித்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.