districts

தேசிய அளவிலான தொழில்நுட்ப கலைத்திருவிழா

நாமக்கல், பிப்.17- திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல் லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப கலைத்திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி குழுமத்தின் சார்பில், 4 நாட் கள் நடைபெறும் “ரங்உத்சவ் 2024” தேசிய  அளவிலான தொழில்நுட்ப கலைத்திருவிழா வின் இரண்டாம் நாளான வெள்ளியன்று பகல் நேர நிகழ்வாக, “ரங் விகாஸ்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பயிலரங்குகள் மற்றும்  கண்காட்சிகள் நடைபெற்றன. இணைய  குற்ற பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சுற்றுச் சூழல் குறித்த ஆய்வு கட்டுரைகள், மூன்றாம்  தலைமுறையின் மரபணு பற்றிய தொழில்நுட் பம் குறித்த ஆய்வு கட்டுரைகள், பற்கள் பாது காப்பு குறித்த விளக்க படங்கள் போன்ற மருத் துவம் சார்ந்த பயிலரங்க நிகழ்வுகள் நடை பெற்றன.  இந்நிகழ்ச்சியில், கேஎஸ்ஆர் கல்விக் குழும தலைமை நிர்வாக அலுவலர் அகிலா முத்துராமலிங்கம், தாளாளர் ஆர்.சீனிவா சன், தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ஆர். கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.