districts

img

திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

திருப்பூர், மார்ச் 1-  திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இம்மாவட்டம் முழுவதும் 13 கல்வி ஒன்றியங்க ளில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது.  இந்த மாவட்ட அளவிலான நிகழ்வில் எளிய அறிவி யல் பரிசோதனைகள் மூலம் சர்.சி.வி.ராமன் அறிவியல் கண்டுபிடிப்பு, அறிவியல் மனப்பான்மை குறித்த விழிப்பு ணர்வு, அறிவியல் உறுதிமொழி ஏற்பு போன்ற செயல்பாடு கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் முக்கிய அம்ச மாக மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முக மூடி அணிந்து அறிவியல் பரப்புவோம்! அறிவியல் மனப் பான்மையை வளர்ப்போம்! என்ற மையக்கருத்தின் அடிப்ப டையில் ஊர்வலம் சென்று பொது மக்களிடமும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். தேசிய அறிவியல் தின நிகழ்வு களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், இல்லம் தேடி  கல்வி மையங்கள் என 5000த்திற்கும் மேற்பட்ட மாணவர் கள் பங்கு பெற்றனர்.