சேலம், ஏப்.14- சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் பால் போட்டியில், 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் விளையாட்டை போன்று சாப்ட் பால் எனப்ப டும் மென்பந்து போட்டி, சேலம் மாவட்டத்தில் தேசிய அளவில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து நான்கு மண்டலங்களாகவும், குறிப்பாக கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரித்து விளையாட்டு வீராங்கனைகள் தனித்தனியே போட்டியில் பங்கேற்றனர். நான்கு கட்டங் களாக போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்கள் என சாப்ட் பால் அசோசியே சன் சேர்மன் பிரவீன் அனோக்கர், இந்திய பொதுச்செயலா ளர் மௌரியா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்த னர். மேலும் அவர்கள் கூறுகையில், சாஃப்ட் பால் விளை யாட்டு நாடு முழுவதும் தற்போது பிரசித்தி பெற்று வருகி றது. தமிழ்நாட்டிலும் விளையாட்டு வீரர்கள் இந்த போட்டி யில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர். வருங்காலத்தில் இன்னும் அதிக விளையாட்டு வீரர்கள் சாப்ட் பால் விளை யாட முன் வருவார்கள், என்றனர்.