உதகை, நவ.2- பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமி ழக அணி அசத்தல் வெற்றி பெற்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூரில் தேசிய அளவிலாக ஹாக்கி போட்டி நடைபெற்றது. 14, 17 மற்றும் 19 வய திற்குட்பட்டோருக்கான போட்டிகளில் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ் நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலி ருந்து மாணவர் பங்கேற்றனர். இதில், 14 வயதினருக்குட்பட்ட பிரிவில் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தமிழ் நாடு எதிர்கொண்டு, 5 – 1 என்ற கணக் கில் வெற்றி பெற்றது. இந்த தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற 18 பேரில் 13 பேர் உதகை கிரசன்ட் கேஸ்டல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஆவர். அதேபோல் 19 வயதினருக்குட்பட்ட பிரிவில் தமிழ் நாடு அணி 2 ஆம் இடம் பிடித்தது. இதையடுத்து வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு மற்றம் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேசிய அளவி லான போட்டியில் வெற்றி பெற்று கோப் பையுடன் வந்த மாணவர்களுக்கு உதகை கிரசண்ட் பள்ளி வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கிரசண்ட் பள்ளியைச் சேர்ந்த 7 மாணவர்கள் தேசிய அளவிலான கேலோ இந்திய போட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.