கோவை, ஆக. 1- சுதந்திர தினத்தை ஒட்டி கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் குவிந்து வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. கொடிகளுக்கான தேவை குறிப்பிடத் தக்க அளவில் உயர்ந்துள்ளது. கோவையில் உள்ள அச்ச கங்கள் மற்றும் தையல் தொழிற்சாலைகளில் பல்வேறு அளவு களில், பல்வேறு வகையான துணிகளைக் கொண்டு தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. கதர், மைக்ரோ துணி, வெல்வெட் துணி போன்ற பல்வேறு வகையான துணிகள் கொண்டு தயாரிக்கப்படும் தேசியக் கொடிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதனால், கோவையில் உள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஒரு உற்பத்தியாளர், “சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடிகளுக்கான தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டும் தேவை அதிகமாக உள்ளது. நாங்கள் நாள் முழுவதும் பணி புரிந்து கொடிகளை தயாரித்து வருகிறோம்”. வருடத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என இரண்டு முறை தேசிய கொடியின் விற்பனை ஜோராக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் தேசிய கொடி வேண்டும் என்று ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இதற்கேற்ப தயாரிப்பு பணி களை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.