திருப்பூர், மே 16 – தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேள னம், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சி பிரிவு அங்கீகாரத்தை, ஒன்றிய அரசு உள்நோக்கத்துடன் சட்டத்துக்குப் புறம்பாக ரத்து செய் ததைக் கண்டித்து திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தில் லியில் போராடிய விவசாய சங்கத்தி னருக்கும், உலகத் தொழிலாளர் பிரச் சனைகளுக்காகப் போராடும் உலகத் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் நிதி உதவி வழங்கியதை காரணம் காட்டி ஒன்றிய அரசு அந்த சங்கத்தின் அங்கீ காரத்தை ரத்து செய்து விட்டது. தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற சங்க அங்கீகார உரிமையை பறிக்கக் கூடிய பாசிச செயலைக் கண்டித்து திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு, மத்திய, மாநில அரசு ஊழியர் மற்றும் பொதுத்துறை ஊழி யர் கூட்டமைப்பினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மின் ஊழியர் மத் திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் ஒன் றிய அரசின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத செயலைக் கண்டித்து உரையாற்றினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலை வர் ராணி, அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் சங்கச் செயலாளர் ராஜேந் திரன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்ட செயலாளர் கனக ராஜா, தொலைத்தொடர்பு ஓய்வூ தியர் சங்க மாவட்ட தலைவர் சௌந் தரபாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட் டனர்.