கோவை, நவ.14- தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியை, தேசிய குழந்தைகள் தினமாக இந்தியா முழுவ தும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச் சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெறும். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாநில குழந்தைகள் பாதுக்காப்பு சங்கம் சார்பில் குழந்தைகள் பாது காப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில், சமூக பாதுகாப்பு துறையினர் மற்றும் தேசிய குழந்தைகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலி யல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித் தான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி பந்தயசாலையில் நிறைவடைந்தது.