நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனங்கள் இணைந்த 37 ஆவது தேசிய புத்தக கண்காட்சி கோவை காந்திபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் வரலாறு, இலக்கியம், அறிவியல், சூழலியல், அரசியல் திறனாய்வு, வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்கள் மற்றும் பொது அறிவு, பாரதி யார், பாரதிதாசன், திருக்குறள் போன்ற கவிதை நூல்கள் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.