பள்ளிபாளையம், மே 29- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வளாக பகுதிக்கு கலைஞர் திடல் என பெயர் சூட்ட பள்ளிபாளையம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பள்ளிபாளையம் நக ராட்சியில் நகர்மன்ற கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், நகர் மன்ற தலைவர் மோ.செல்வராஜ், மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை, நகர் மன்ற உறுப் பினர்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு, பள்ளிபாளையம் ஆவரங் காட்டில் சமுதாயக்கூடம் மற்றும் விழா மேடை அமைந்துள்ள வளாகத்திற்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைத்து, வளாகத்திற்கு கலைஞர் திடல் என்று பெயர் சூட்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நக ராட்சி திட்டப் பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.