districts

பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.6- விவசாயிகள், தொழிலாளர் கள், குழந்தைகளை புறக்கணித்து நிறைவேற்றப்பட்ட ஒன்றிய அர சின் பட்ஜெட் நகலை கிழித்து, மத் திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு தொடர்ச்சி யாக தொழிலாளர் நலனுக்கு விரோ தமான சட்டங்களை அமல்படுத்தி  வருகிறது. குறிப்பாக, பொதுத் துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்த்தல், அவுட்சோர் சிங் முறையை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி களை தொழிலாளர்கள் மத்தியில்  புகுத்தி வருகிறது. தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளின் நலன் காக் கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அறி விக்கப்பட்ட பட்ஜெட் என்பது விவ சாயிகள், தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் என அனை வருக்கும் எதிராக உள்ளது. இத னைக் கண்டித்து மத்திய தொழிற் சங்கத்தினர் வியாழனன்று, பட் ஜெட்டின் நகலை கிழித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில  துணைத்தலைவர் ஆர்.சிங்கார வேலு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் இளங்கோ, நிர்வாகி பன்னீர் செல்வம், எல்பிஎப் நிர்வாகிகள் பொன்னி பழனியப்பன், கிருஷ்ண மூர்த்தி, ஹெச்எம்எஸ் நிர்வாகி  கணேசன், ஏஐடியுசி நிர்வாகிகள் முனுசாமி, பரமசிவம், ஏஐசிசிடியு நிர்வாகி பாலு, ஐஎன்டியுசி நிர்வாகி கள் நடராஜன், கிருஷ்ணன், ஏஐ யுடிசி நிர்வாகிகள் மோகன், நட ராஜன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, எல்பிஎப் மாவட்டத் தலை வர் கே.அன்புமணி தலைமை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டப் பொருளாளர் சி.கலாவதி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பி.எம்.சண்முகராஜா, மாவட்டப் பொருளாளர் கே.சேகர்,  ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. மணி, மாவட்ட நிர்வாகி மனோக ரன், ஐஎன்டியுசி மாவட்டத் தலை வர் கே.சிவலிங்கம், செயலாளர் சண்முகம், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் எம்.அர்ஜுனன், தலை வர் மாதையன், ஏஐசிசிடியு மாவட் டத் தலைவர் கே.கோவிந்தராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை முன்பு,  சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் எம்.செங்கோடன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர்  கலந்து கொண்டனர். குமாரபாளை யம், பள்ளிபாளையம் பிரிவு சாலை  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் தரணி கேசவன் மற்றும் ஏஐடி யுசி, எச்எம்எஸ், எம்எல்எப், எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர் கள் கலந்து கொண்டனர். இதே போன்று, திருச்செங்கோடில் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன், ஆண்டிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆதி நாராயணன், நகரக்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.  இதில்,  சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன், முன்னாள் எம்எல்ஏ., யு.கே.வெள்ளையங்கிரி, எல்பிஎப் சார்பில் பி.துரைசாமி, ஐஎன்டி எஸ்சி சார்பில் பி.சண்முகம், ஏஐடி யுசி மாநில துணைத்தலைவர் எம். ஆறுமுகம், மாவட்ட பொதுச் செய லாளர் சி.தங்கவேலு, எச்எம்எஸ் சார்பில் டி.எஸ்.ராஜாமணி, எம்எல் எப் மு.தியாகராசன், ஏஐசிசிடியு பாலசுப்ரமணியம், மாநில செயற் குழு உறுப்பினர் பிலோமினா, எல்டி யூசி சார்பில் ஜெயபிரகாஷ் நாரா யணன், ஜி.மணிகண்டன் உள்ளிட்ட  அனைத்து தொழிற்சங்க தலைவர் கள் பங்கேற்றனர்.முன்னதாக  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர் கள், ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட் நகல் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி  திடல் முன்பு நகல் கிழிக்கும் போராட்டம் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் தலைமை யில் நடைபெற்றது. இதில், சிஐடியு  மாவட்டச் செயலாளர் சி.வினோத், சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், எல்பிஎப் கவுன்சில் செயலாளர் ஜெயராமன், பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், ஏஐ டியுசி மாவட்டத் தலைவர் போஜ ராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜே.ஆல்துறை, மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், மூர்த்தி, கிருஷ்ணன், சேகர் மற்றும் ஏஐடி யுசி, எல்பிஎப் நிர்வாகிகள் உள் ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சிஐ டியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார். ஈரோடு  ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை நகலை கிழித்து நடத்திய  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநி லச் செயலாளர் எஸ்.சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எச்.ஸ்ரீ. ராம், தொமுச எஸ்.கோபால், எஸ் எம்எஸ் ஜீவா பி.சண்முகம், ஐஎன்டி யுசி என்.துரைசாமி, டிடிஎஸ்எப் எம். கார்த்திகேயன், எஐசிசிடியு ஜெ.பி. கார்த்திகேயன், எல்டியுசி கே.ஆர்.கிருஷ்ணமூர்தி ஆகியோர் கலந்து  கொண்டு கண்டன உரையாற்றி னர்.