உடுமலை, செப். 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன் றியக் குழுவின் 24 ஆவது மாநாட்டில் ஒன்றியக்குழு செயலாளராக என்.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன் றிய மாநாடு கே.சுப்பிரமணியன் நினைவரங் கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர் லட்சுமண சாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக்குழு செயலாளர் என்.சசிகலா அறிக் கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். இந்த மாநாட்டில் 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டார்கள். ஒன்றியக்குழு செயலாள ராக என். சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இம்மாநாட்டில், இப்பகுதி விவசாயிகளின் ஐம்பது ஆண்டு கால கனவு திட்டமான ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்தும் வகை யில் மாதம் முழுவதும் அனைத்து பொருட்க ளும் கிடைக்கும் வகையில் நியாய விலைக் கடைகளை செயல்படுத்த வேண்டும். கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் ஊரக வேலை திட் டத்தின் கீழ் வேலை நாட்கள் மற்றும் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். குடிமங்க லம் ஒன்றியத்தில் பொதுமக் களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திருமூர்த்தி அணையில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். கொரோனா காலத் தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். பெதப்பம்பட்டி ஊராட் சியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண் டும். இராமச்சந்திரபுரம் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றி யக்குழு செயலாளர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் நிறைவுரை யாற்றினார். நிறைவாக கோட்டமங்கலம் கட்சி கிளைச் செயலாளர் முருகன் நன்றி கூறி னார்.