districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நாளை கல்விக்கடன் முகாம்

நாமக்கல், செப்.24- நாமக்கல்லிலுள்ள எர்ணாபுரம் சி.எம்.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழனன்று (நாளை) கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும்,  மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து  நடத்தும் கல்விக்கடன் முகாம் வியாழனன்று காலை 9 மணிய ளவில் நாமக்கல் – திருச்செங்கோடு சாலை, எர்ணாபுரம் சி.எம்.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே நாமக்கல் கல்லுாரி மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப் பங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படுகிறது. மேலும்,  முகாமில் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாண வர்கள் புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் இணை யத்தில் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வி கட னுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர் ஆதார், பான்  கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு, விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பான்  கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் நகல் மற்றும் 2 புகைப் படங்கள் எடுத்து வந்தால் முகாம் நடைபெறும் இடத்திலேயே  இ - சேவை மையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து  கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி,  கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும்  இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்க ளுக்கு 9486349282 என்ற கைபேசி எண் அல்லது சேந்தமங்கலம் சாலையில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கியை நேரடி யாவே அணுகி பயனடையலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுயானை தாக்கி முதியவர் பலி: உறவினர்கள் மறியல்

தருமபுரி, செப்.24- பாலக்கோடு அருகே காட்டுயானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செங்கோடப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி (68) என்பவர், தனது தோட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டுள் ளார். காட்டுப்பன்றிகளை விரட்ட ஞாயி றன்று இரவு தோட்டத்தில் காவலில் இருந்தார். இந்நிலையில், திங்களன்று அதிகாலை அவ்வழியாக வந்த ஆண்  காட்டுயானை முதியவரை ஆக்ரோச மாக தாக்கியது. இதில் முதியவர் துரை சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இதனை அறிந்த, அவரது உறவினர் கள் வனத்துறையைக் கண்டித்து செங் கோடப்பட்டி சாலையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், யானை நட மாட்டம் இருப்பது தெரிந்தும் வனத் துறையினர் எவ்வித முன்னெச்சரிக்கை யும் எடுக்கவில்லை. யானையை அடர்ந்த  வனத்துக்குள் விரட்டுவதில் வனத்துறை யினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் விளை நிலங்களில் நுழையும் யானைகள் அங்கு பயிர்களை சேதப்படுத்திச் செல் கின்றன. யானையிடமிருந்து விளைநிலங் களை பாதுகாக்க முடியவில்லை, என் றனர். இப்போராட்டம் குறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்க வந்த பாலக் கோடு காவல் துறையினர், பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். அப்போது, இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் அளித்த உறுதியின்பேரில், பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின், காவல் துறையி னர் முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அண்மையில், செங்கோடப்பட்டி அருகே உள்ள தீத்தாரப்பட்டியில் இதே போல ஒற்றை யானை முதியவரை மிதித் துக் கொன்றது. தற்போது மேலும்  ஒரு முதியவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை

சேலம், செப்.24- ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவ லக வளாகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல் துறை யினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.1,26,500 ரொக்கம் பறி முதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாரப்  போக்குவரத்து அலுவலகம் தென்னங்குடி பாளையம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ் சாலை அருகே செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள், அலுவலர்கள் லஞ் சம் பெற்றுக் கொண்டு பணிகளை செய்து வரு வதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய ஓட்டுநர் உரி மம் எடுத்தால் அந்த உரிமம் தபால் மூலம் மட் டுமே உரிமையாளருக்கு அரசு அனுப்புகி றது. ஆனால், இங்கு உரிமம் எடுத்த சில நொடி களில் நகல் எடுத்து விற்பனை செய்யப்படுவ தாக கூறப்பட்டது. இதையடுத்து சேலம் லஞ்ச  ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், ஆய்வாளர் முருகன், காவலர்கள் அடங்கிய குழுவினர்  திங்களன்று மாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண் டனர். அதில், கணக்கில் வராத ரூ.1,26,500 ரொக் கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறைதீர் கூட்டம்

சேலம், செப்.24- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.27 ஆம்  தேதியன்று  விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற வுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024 - செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்.27  ஆம் தேதியன்று (வெள்ளி யன்று) காலை 10:30 மணிக்கு, ஆட்சியரக இரண்டாம் தள  கூட்ட அறை எண்:215-இல்  நடைபெற உள்ளது.  விவ சாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட் டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரி லும், விண்ணப்பம் மூலமாக வும் தெரிவிக்கலாம், என அறி விக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள்

நாமக்கல், செப்.24- முதலமைச்சர் கோப்பைக்கான நாமக்கல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி களில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 269 பேர்  கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் கடந்த  செப்.10 ஆம் தேதி தொடங்கின. நாமக்கல்  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாண விகளுக்கான விளையாட்டு போட்டிகள், பொதுப் பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் மற் றும் மாற்றுத்திறானிகளுக்கான விளையாட் டுப் போட்டிகள் என ஐந்து பிரிவுகளில் 15  வகையான விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்று வந்தன. இப்போட்டிகளில் பங்கேற்க  31,655 வீரர், வீராங்கனைகள் இணையவழி யாக விண்ணப்பித்த நிலையில், 25,795 பேர்  கலந்து கொண்டு விளையாடினர்.  இப்போட்டிகள் அனைத்தும் திங்களன்று நிறைவடைந்தன. கடைசி நாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறி தல், ஓட்டப்பந்தயப் போட்டிகளில் 155 ஆண் கள், 114 பெண்கள் என மொத்தம் 269 பேர்  கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற் பர் என விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியாக வசித்து வந்த பெண் கொலை

சேலம், செப்.24- ஓமலூர் அருகே தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, மலை பெரு மாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி (50). இவரது மகன் மற்றும் கணவர் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், குமாரி மட்டும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார். குமாரி அருகில் வசித்து வரும் நீலா என்ப வரது வீட்டிற்கு தினமும் டி.வி. பார்க்க சென்று  வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்க ளாக குமாரி நீலா வீட்டிற்கு டி.வி. பார்க்க  செல்லவில்லை.  மேலும், குமாரியும் வீட்டி லிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் திங்களன்று காலை குமாரி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப் போது அவர் வீட்டிற்குள் கொலை செய்யப் பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதைபார்த்து அதிர்ச்சிய டைந்த அவர்கள், இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல், ஓமலூர் துணை காவல் கண்காணிப் பாளர் சஞ்சய் குமார், தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபு ணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதன் பின் போலீசார் குமாரியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரி சொத்து தகராறில் கொலை செய்யப் பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம்  என்று போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே, அண்மை காலமாக தனி யாக வசித்து வரும் முதியவர்களை கொலை  செய்து, அவர்களது வீட்டிலிருக்கும் நகை மற் றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகி றது. அதன்ஒருபகுதியாக இச்சம்பவம் நடை பெற்றுள்ளதா? என்பது கேள்விகளை எழுப்பி யுள்ளது.

திருப்பூர் வடக்கு மாநகர சிபிஎம் கிளை மாநாடுகள்

திருப்பூர், செப். 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாந கரத்துக்கு உட்பட்ட கிளை மாநாடுகள் ஞாயிறன்று நடை பெற்றன. இம்மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளைச் செயலா ளர்கள் விபரம்:  பத்மாவதிபுரம் - த.காளிதாஸ், கருமாரம்பா ளையம் ஏ கிளை - எம்.ரமேஸ், கருமாரம்பாளையம் பி கிளை -  எஸ்.கே.பொன்னுசாமி, பாரம்பாளையம் புதிய கிளை - எஸ். பாப்பண்ணன், பிரிட்ஜ் வே காலனி - சண்முகசுந்தரம், நெசவா ளர் காலனி - கம்யூனிஸ்ட் கே.மணி, கொங்கணகிரி கிளை -  பழனிசாமி, எம்.எஸ் நகர் மாதர் - சாந்தாமணி,  குமரானந்தபு ரம் வடக்கு - இசக்கி முத்து, ராமமூர்த்தி நகர் - தண்டபாணி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் வை.ஆனந்தன், ஆர்.மைதிலி, மாநகரக்குழு உறுப்பினர்கள் பா.சௌந்தர ராசன், ஒய்.அன்பு, கே.நாகராஜ், பி.மனோகரன், ஆர்.நந்தகோ பால். பொன்.பாலகுமாரன், ஈ.வளர்மதி, துரை.சம்பத், பா.ராஜேஸ், ராமானந்த், தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற் றனர்.  இதில், கருமாரம்பாளையம் நடுநிலைப்பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், எம்.எஸ் நகர்  பகுதியில் குடிநீர் விநியோகத்தை முறையாக வழங்க வேண் டும், பல வருடங்களாக எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ள பாரப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். டி.எம்.எஸ் நகர் பகுதியில்  தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக தார்ச்சாலையாக  அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

திருப்பூர், செப். 24 - திருப்பூர் அணைக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டனர். ராஜபாளையம் பகுதியை சேர்ந்வர்  நாக சுரேஷ், அவரது  மனைவி விஜயலட்சுமி. மகள் முத்தீஸ்வரி ஆகிய மூவரும்  கடந்த ஓராண்டாக அணைக்காடு பகுதியில் வசித்து வந்தனர்.  கடந்த சில நாட்களாக அவர்கள் வீடு பூட்டப்பட்டிருந்தது. செவ் வாயன்று காலை துர்நாற்றம் வீசியதையடுத்து அருகாமை  வீட்டார் காவல் துறைக்கு புகார் அளித்தனர். திருப்பூர் வடக்கு  காவலர்கள் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்தபோது நாக சுரேஷ், விஜயலட்சுமி, முத்தீஸ்வரி மூவ ரும் வெவ்வேறு இடத்தில் இறந்து கிடந்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பணம் கொடுக்கள் வாங்கள் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

ரூ.1.56 கோடி நிதி முறைகேடு? போடிபட்டியில் வட்டாட்சியர் விசாரணை

உடுமலை, செப்.23 - போடிபட்டி ஊராட்சியில் கடந்த 2020 ஆம்  ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஊராட் சிமன்ற நிர்வாகத்தில் பல்வேறு பணிகள் செய் ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, செவ்வா யன்று போடிபட்டி ஊராட்சிமன்ற அலுவல கத்தில் உடுமலை வட்டாட்சியர் விசாரணை நடத்தினார். உடுமலை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில் போடிபட்டி, அண்ணாநகர் மற்றும் சுண்டக்காம்பாளையம் ஆகிய பகு திகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தலைவர் மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜன.6 ஆம் தேதி முதல் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை ஊராட்சியின் செலவினங்களை ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஊராட்சி நிதியில் ஒரு வேலையை செயல்படுத்தும்போது டென்டர் விதிமுறைகள், பராமரிப்பு மதிப்பீ டுகள், தொழில்நுட்ப பணியாளர்கள், மேற் பார்வை, கொள்முதல் செய்வதில் விதிமுறை கள் பின்பற்றப்படாதது. மேலும் அரசுக்கு  சேர வேண்டிய வரியினங்கள் பிடித்தம் செய் யாதது, ஜிஎஸ்டி எண் இல்லாத பட்டியல்க ளுக்கு தொகை வழங்கியது உள்ளிட்ட ஊராட்சி விதிகள் பின்பற்றப்படாத காரணத் தால் ஊராட்சியின் செலவுச் சீட்டுகளின் படி  நடைபெற்ற 21 வேலைகளில் சுமார் 1  கோடியே 56 லட்சத்து 298 ரூபாய் ஊராட்சி  மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து உடுமலை வட்டாட்சி யர் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் உறுப் பினர்களிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து ஊராட்சிமன்றத் தலைவர்  செளந்தர்ராஜன் கூறுகையில், கடந்த 4 ஆண் டுகளாக ஊராட்சியின் செலவினங்களை தணிக்கை செய்தபோது சில குறைபாடு களை குறிப்பிட்டார்கள். இந்த செலவி னங்கள் அவசர அத்தியாவசிய காலங்க ளில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள். முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூற இய லாது. இந்த செலவினங்கள் அனைத்தும் கொரானா காலத்தில் மேற்கொள்ளபட்ட வேலைகள்தான். மேலும், போடிபட்டி ஊராட்சி பகுதியில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி முழுவதும் கொரனா சிறப்பு  முகாமாக மாற்றபட்டது. இந்த சிறப்பு முகாம்  பகுதியில் குடிநீர் மற்றும் பொது சுகாதாரம்  உள்ளிட்ட வசதிகளை போடிபட்டி ஊராட்சி யின் ஊழியர்கள் மற்றும் தினக்கூலி அடிப் படையில் பலர் செய்தார்கள். மேலும், மழை  வெள்ளம் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரி டர் காலத்தில் தூய்மைப் பணிக்கு பயன்ப டுத்திய டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனங்க ளுக்கு வழங்கபட்ட செலவின ரசீதுகளில் ஜிஎஸ்டி வரி இல்லை. வாடகை வேலைக்கு  இவ்வகையான ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. ஊராட்சி நிர்வாகத்திற்குத் தேவை யான பொருட்கள் வாங்கும்போது மட்டுமே வரி இருக்கும் என்று தணிக்கைக்குழு தெரி வித்த குறைபாடுகள் குறித்து தெரியப்ப டுத்தி உள்ளது. கொரோனா பேரிடர் காலத் தில் செய்யப்பட்ட செலவினங்களால் ஊராட் சிக்கு நிதி இழப்பு என்ற குற்றசாட்டு தவறா னது என்று தெரிவித்தார். ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நடை பெற்றது குறித்து வட்டாட்சியர் தலைவர்  மற்றும் உறுப்பினர்களிடம் தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரணை நடத்தியது அப்ப குதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள் ளது.

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு, செப். 24- ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அந்தியூரில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தையும், பர்கூர் மலைப் பகுதியில் இருந்து  வரும் காட்டாற்று வெள்ளத்தை தோனிம டுவு திட்டத்தையும்  இணைப்பது. பவானிசாகர் அணையில்  இருந்து வரும் உபரி நீரை அந்தியூர், அம்மாபேட்டை, பவானி  ஆகிய  ஒன்றிய பகுதிகளில் இருக்கும் ஏரிகளை நிரப்புவது.  டி.என்.பாளையம் மலைப்பகுதியில் இருந்து வரும் காட் டாற்று வெள்ள நீர் வீணாக ஆற்றில் கலப்பதை தடுத்து  தடுப் பணை கட்டுவது வேதபாறை அணை திட்டம். இம்மூன்று  திட்டங்களையும் நிறைவேற்றிட கடந்த மூன்று ஆண்டு களாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின்  உத்தரவுகளின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரி விக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்திற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் சிறப்புரை ஆற்றினார்.  இக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

ஆற்றிலிருந்து சிலைகள் மீட்பு

ஈரோடு, செப். 24- பவானி ஆற்றில் இருந்து 14 கற்சிலைகளை வருவாய்த் துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டன், டி.என். பாளையம் அருகே பவானி  ஆற்றில், சிலைகள் கிடப்பதாக, ஈரோடு தொல்லியல் துறை யினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் அளித்த னர். இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து,  சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் சிலையை எடுத்து செல்ல முடியவில்லை.  இந்நிலையில் வாணிபுத்துார் ஆர்.ஐ., ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், பவானி அங்கு  கிடந்த அம்மன், கருப்பராயன், நவக்கிரகங்கள், போர்வீரர்  உள்ளிட்ட, 14 கற்சிலைகளை கைப்பற்றி கோபி தாலுகா அலு வலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆய்வுக்கு ஈரோடு தொல் லியல் துறையினருக்கு சிலைகளை அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்தனர்.

மாசு ஏற்படுத்துவதாக துணி ஆலை மீது புகார்

ஈரோடு, செப். 24- ஈரோடு மாவட்டம், கோபியில், நடைபெற்ற குறைதீர் கூட் டத்தில், பெருமுகை, திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் துணி  ஆலையால் மாசு ஏற்படுவதாக மனு அளித்தனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிவசக்தி  நகர் அருகே வீடு கட்டுவதற்கெனக் கூறி நிலங்களை சிலர்  வாங்கினர். பின்னர் பாலியஸ்டர் துணி உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவினர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த  ஆலை  செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இருந்து  துணிகளின் தூசி, நூல், கண்ணுக்கு தெரியாத துகள்கள்  பறந்து வீடு, நீர் நிலைகள், விளை நிலங்கள், செடிகளின்  மீதும் படர்கிறது. இதனால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல், அலர்ஜி என பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து வட் டாட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என பலரி டம் மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, அதிகாரிகள் தலையிட்டு எங்களின் பிரச் சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மனு அளித்த னர்.  இதேபோன்று, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டம், கடம்பூர் மலை, குரும்பூர், மாமரத்தொட்டி, அரியி யம் ஆகிய மலை கிராம மக்கள் அளித்த மனுவில், குத்தி யாலத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மாமரத்தொட்டி மலை கிரா மத்தில் பல ஆண்டுக்கு முன் 50 குடும்பங்கள் வசித்து வந்த னர். அப்போது இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத் ்தின் கீழ் 28 வீடுகள் கட்டி கொடுத்தனர். அவை பழுதாகி  பல ஆண்டுகளாகி விட்டது. தற்போது குடும்ப உறுப்பி னர்கள் அதிகரித்து 110 குடும்பங்களாகி விட்டது. எனவே,  தேவையான எண்ணிக்கையில் வீடுகள் கட்டித்தர வேண் டும்.  மேலும், எங்களுக்கு தனி மயானம் அமைத்து தர வேண் டும். எங்கள் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத் தில் உள்ள குரும்பூரில் துவக்கப்பள்ளியும், மாக்கம்பாளை யத்தில் உயர்நிலைப் பள்ளியும், 3 கிலோ மீட்டருக்கு அப் பால் உள்ள கடம்பூரில் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இப் பள்ளிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. காட்டுப் பாதையில், வன விலங்குகள் நடமாட்டத்துக்கு மத்தியில் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே  குழந்தைகள் பள்ளி செல்ல சாலை வசதியுடன், மினி பேருந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் சொத்துகளை அபகரிப்பதாக புகார் விசாராணை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

உதகை, செப்.24- உதகை அருகே செயல்பட்டு வரும் பிர பல தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில், இறந்தவர்களின் சொத்துகளை அபகரிப் பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வந்த நிலையில், இது குறித்து விசா ரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள  முள்ளிக்கொரை பகுதியில் நகர்புற வீடற் றோர் தங்கும் விடுதி கட்டிடத்தில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் என்ற காப்ப கம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத் திற்கு, நகராட்சி மூலம் மாதந்தோறும் ரூ. 40  ஆயிரம் நிதி உதவியும் வழங்கபட்டு வருகி றது. இதற்கிடையே கடந்த சில மாதங்க ளாகவே இக்காப்பகத்தில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்ற வருவதாக புகார் எழுந்து வந்தது.  இந்நிலையில், அது தொடர் பான வீடியோக்களும் சமூக வலைதளங்க ளில் பரவி வருகிறது. இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர், அப்துல் கலாம் காப்பகத்தில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி மாவட்ட  ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, அப்துல் கலாம் காப்பகத்திற்கு வருபவர்களி டம் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகி றது. இங்கு இறந்தவர்கள் குறித்து அரசுக்கு  முறையாக தகவல் தெரிவிப்பது கிடையாது.  மேலும், இறந்தவர்களின் சொத்துக்களை முறைகேடாக அபகரித்துக் கொள்கின்றனர். மேலும், பல்வேறு செயல்பாடுகளில் முறை கேடுகள் உள்ளது. இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி  பவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில்  உள்ள அறக்கட்டளைகள் குறித்து முழுமை யாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள் ளது. உதகையில் உள்ள அப்துல் கலாம்  அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்து உள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர் கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.  அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில்  அறிக்கை அளிப்பார்ள். அந்த அறிக்கை யின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும்’ என்றார். இது சம்பந்த மாக செவ்வாயன்று வட்டாட்சியர் ராணி, உத கமண்டல ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மற் றும் அரசு உயர் அதிகாரிகள் விசாரணை துவக்கினர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித்தகவல்கள் வந்துள்ளதாக கூறப் படுகிறது.

ஏஐ தொழில்நுட்பதால் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது: யுவன் சங்கர் ராஜா பேட்டி

கோவை, செப்.24- ஏஐ தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசைய மைப்பாளர்களுக்கு வேலை இருக் காது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கோவையில் செய்தியாள ருக்கு பேட்டியளித்து உள்ளார். கோவையில் வருகின்ற 12 ஆம் தேதி யன்று கொடிசியா மைதானத்தில் இசை யமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா செவ்வாயன்று செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது, பேசிய யுவன் சங்கர் ராஜா, ரசிகர்களுக்கு பிடித் தமான பாடல்களும், புதிய முயற்சிகளு டனும் நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக் கும் என நம்புகிறேன். கோவையைச்  சேர்ந்த ரசிகர்கள் மிகவும் புத்துணர்ச்சி  கொண்டவர்கள். அவர்களின் உணர்வு கள் மூலமாக தான் நல்ல நல்ல பாடல்கள்  என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்கள் ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்சனாக பார்க்கிறேன். இதனால், பாடலின் ஒரிஜினாலிட்டி கெடாது. ஏஐ - தொழில் நுட்பத்தால் அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது. ஏஐ தொழில்நுட்பத்தில் உண்மைக் தன்மை இருக்காது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மை தான். பழைய பாடல்களை பயன்படுத்து வதில் காப்பிரைட் பிரச்சனை நிச்சயம் வரும். ஆனால், முன்னதாகவே அனு மதி பெற்று பாடல்களை பயன்படுத்து வது சரியான முறையாக இருக்கும். கோட் திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்வது ரசிகர்களின் கருத்துகளுக்கு பின்பே அதை நாங்கள் மேற்கொண்டோம். என்றார். 

பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்

தருமபுரி, செப்.24- பட்டியலின மக்களுக்கு குடிமனைபட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி, செப்.30 ஆம் தேதியன்று கடமடை கிரா மத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தருமபுரி மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில், பென்னாகரம் வட்டம், மஞ்சநாய்க்கன அள்ளி ஊராட்சி, கடமடை வருவாய் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 40/2பி-யில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 9.88 ஏக்கர் நிலத்தில் மனைபட்டாவிற்காக மஞ்சநாய்க்கன அள்ளி மற்றும் கலப்பம்பாடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பட்டியலின மக்கள் போராடி வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வரும் நிலையில், இம்மக்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தியும், மனைபட்டா கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை கண்டித்து செப்.30 ஆம் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தன்று, 5 ஆவது மைல்கல், கடமடை கிராமத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற உள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.