நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் நகராட்சி நிர்வாகம்
ஈரோடு, ஜூன் 23- நீதிமன்ற உத்தரவை மீறி நீர் வழிப்பாதையில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர் வாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி, 13 மற் றும் 14 ஆவது வார்டு பகுதிகள் வழியாக மழைநீர் ஓடை செல்கிறது. தற்போது நகராட்சி குடியிருப்புகளின் கழிவுநீர் கழப்பதால், கழிவுநீர் ஓடையாகிவிட்டது. ஓடையையொட்டி அம்மன் நகர், சருகு மாரியம்மன் கோவில் வீதி, தோட்டச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுக ளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நக ராட்சி சார்பில், மழைநீர் ஓடையை ஆக்கிரமித்து, கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஓடையின் குறுக்கே, 40க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஓடையில் மழைநீர் செல்ல முடியாமல், மழை பெய்யும் சமயங்களில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறதென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும், நீர் வழிப் பாதையில் கட்டுமானப் பணியை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையெல்லாம் மீறி நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு பயன்படாத இந்த திட்டத்தை கைவிட்டு, மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்ற னர்.
தருமபுரிக்கு ஜூலை 11 இல் முதல்வர் வருகை
தருமபுரிக்கு ஜூலை 11 இல் முதல்வர் வருகை தருமபுரி, ஜூன் 23- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11 ஆம் தேதி, தருமபுரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 11 ஆம் தேதி தருமபுரி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு, முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கி றார். இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களை ஆட்சியர் கி.சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார் வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஆட்சியர் கி.சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். மேலும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி ஆட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் பார்வதி ஆகியோர் அப்பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிகழ் வில், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக் குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காவலர் மருத்துவமனை நூற்றாண்டு விழா
கோவை, ஜூன் 23- கோவை மாநகர காவலர் மருத்துவமனை நூற்றாண்டு விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவை மாநகர ஆயுதப்படை வளாகத் தில் அமைந்துள்ள காவலர் மருத்துவமனை யானது கடந்த 1924 ஆம் ஆண்டு துவங்கப் பட்டதாகும். இம்மருத்துவமனை துவங்கப் பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன் னிட்டு, நூற்றாண்டு விழா நடைபெற்றது. நூற் றாண்டு விழா கல்வெட்டினை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்து, சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும், மருத்துவம னையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவ அலுவலர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித் தார். தொடர்ந்து, பாலகிருஷ்ணன் பேசுகை யில், காவல் துறையை போன்று மருத்துவத் துறையும் முக்கியமான துறையாகும். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் காவல் துறையி னரிடம், கோவை காவலர் மருத்துவமனை யினர் கனிவோடு நடந்து வருகின்றனர். மருத்துவர்களின் கனிவால் நோயாளிகள் குணமடைந்து விடுகின்றனர், என்றார்.
தக்காளி விலை கடும் உயர்வு: மக்கள் சிரமம்
சேலம், ஜூன் 23- சேலம் காய்கறி சந்தைகளில் தக்காளி விலை கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப் படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளா கியுள்ளனர். சேலம் சந்தைகளுக்கு ஆத்தூர், வாழப் பாடி, எடப்பாடி, மேச்சேரி, மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகு திகளில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகா மாநி லங்களில் இருந்தும் அதிகளவில் காய்கறி கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின் றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள், வியாபாரிகள் வாங்கி செல்கின்ற னர். இந்நிலையில், ஆந்திரம் மற்றும் கர்நா டகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி செடிகள் அழுகி பூக்கள் உதிர்ந்துள்ளதால், விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளது. இதன்காரணமாக சேலம் சந்தைக ளுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்துள் ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலம் சந்தைகளில் ரூ.45 முதல் ரூ.50 வரை இருந்த தக்காளி விலை, கடந்த வாரம் ரூ.60 ஆக உயர்ந்தது. தொடர்ந்து இந்த வாரம் தக்காளி விலை மேலும் உயர்ந்து, வெளி சந்தைகளில் கிலோ ரூ.100 வரை விற்பனை யாகிறது. இதனால் பொதுமக்கள் தேவையை விட குறைந்தளவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.
அரசு பள்ளி மாணவி முதலிடம்
அரசு பள்ளி மாணவி முதலிடம் நாமக்கல், ஜூன் 23- மாவட்ட அளவிலான கவிதைப்போட்டியில், மோகனூர் அரசு மாதிரி பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவி லான கவிதை போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங் கேற்றனர். இதில் மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி முதல் பரிசை வென்றார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா பாராட்டி, கேடயம் மற் றும் சான்றிதழ் வழங்கினார். மேலும், மாணவிக்கு அப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாழைத்தார்களின் விலை உயர்வு
கோபி, ஜூன் 23- வாழைத்தார்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள் சாகுபடிக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தேன்வாழை, செவ்வாழை, பூவன், ரொபஸ்டோ, கதளி, நேந்திரன் உள்ளிட்ட ரகங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அறுவடை செய்யும் வாழைதார்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரத்தில் இரு நாட்கள் நடைபெறும் ஏல விற்ப னையில் கலந்து கொண்டு விற்பனை செய்து வருகின்ற னர். அதன்படி, சனியன்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்திற்கு 3 ஆயிரம் வாழைத்தார்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. இதில் செவ்வாழை அதிகபட்சமாக ரூ.1100க்கும், பூவன் ரூ780க்கும், ரஸ்தாளி ரூ.710க்கும் விற்பனையானது. மேலும், நேந்திரன் கிலோ ஒன்றுக்கு ரூ.43 வரைக்கும், கதளி ரூ.50 வரைக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. வாழைத்தார்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடகு வைத்த வாகனத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி: 2 பேர் கைது
கோவை, ஜூன் 23- கோவையில் அடகு வைத்த வாகனத்தை திருப்பி கொடுக் காமல் மோசடி செய்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், ரத்தினபுரி, பொங்கியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் (51). தேங்காய் வியாபாரியான இவர், தொழில் உபயோகத்திற்காக சரக்கு வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். பின்பு மருத்துவச் செலவுக்காக அந்த வாகனத்தை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத் திற்கு ஒருவரிடம் அடகு வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சேதுராமன் அடகு வைத்தவரிடம் வட்டி, முதலும் சேர்த்து ரூ.1.60 லட்சத்தை திருப்பி செலுத்திய பின்பு, வாகனத்தை திருப்பி கேட்டபோது, அவர் கொடுக்காமல் மிரட்டல் விடுத் துள்ளார். இதுகுறித்து சேதுராமன் ரத்தினபுரி காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து, அடகு வைத்த வாகனத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த குனியமுத்தூர், குறிச்சி நகரைச் சேர்ந்த முகமத் சபீர் (33), உடுமலைப்பேட்டையை சேர்ந்த சதாம் உசேன் (32) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல், ஜூன் 23- மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், கிலோ ரூ.600க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள எருமப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வந்திப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லிகை பூக்கள் பயிரிட்டுள்ளனர். தினமும் வருமானம் தரக்கூடிய பயிர் என்பதால், இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை பூ செடிகள் வளர்த்து வருகின்றனர். இங்கி ருந்து ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு தினமும் 5 டன் வரை மல்லிகை பூக்கள் ஏலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இப்பகுதியில் பெய்த நல்ல மழையால், தற்போது மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், பூக்கள் அதிகளவில் தேவையிருப்பதால் கடந்த 4 நாட்களாக குண்டு மல்லிகை பூக்கள் விலை ரூ.600க்கு குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணமோசடி: கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பணிநீக்கம்
சேலம், ஜூன் 23- எடப்பாடி அருகே கூட்டுறவு கடன் சங்கத் தில் பணமோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட னர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2017 முதல் 2020 வரை ரூ.3.60 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றது அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் உரிய விசா ரணை நடத்தி, கூட்டுறவு சங்க செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்தனர். மேலும், இதுதொடர்பாக சேலம் மாவட்டப் பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, செயலாளர் மோகன், தலைவராக இருந்த சத்யபானு, உதவி செயலாளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமாா் ஆகியோரை கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கூட்டுறவு துணை பதிவா ளர் ரவிக்குமார் உத்தரவிட்டாார். இதைய டுத்து, கூட்டுறவு செயலாட்சியர் கவிதா விசாரணை நடத்தியதில், உதவி செயலா ளர் மணி, தலைமை எழுத்தர் ரவிக்குமார் ஆகியோர் ரூ.1 கோடி கையாடல் செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட் டார்.
ராசிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டமா?
நாமக்கல், ஜூன் 23- ராசிபுரம் அருகே சிறுத்தை போன்ற விலங்கின் நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் பிரிவு பகுதியில் தனியார் கார்மெண்ட் பின்புறம் விவசாய நிலம் உள்ளது. இதில், மா, கொய்யா, சப்போட்டா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலத்தை கடந்து சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று ஓடிய தாக இருசக்கர வாகன ஓட்டிகள் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் ராசிபுரம் வன அலுவலர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையி னர், அப்பகுதியில் ஆய்வு செய்து, காலடி தடத்தை எடுத்தனர். மேலும், தேங்கல்பாளை யம் பிரிவில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று பொதுமக்கள், விவசாயிகளிடம் ஏதேனும் விலங்கு நடமாட்டம் இருக்கிறதா? எனக் கேட்டறிந்த னர். மேலும், நாய், ஆடு, மாடு உள்ளிட்ட வற்றை தாக்கியதா? எனவும் கேட்டறிந்தனர். அதுபோன்ற எந்த அசம்பாவிதமும் இல்லை என பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த னர். மேற்கண்ட விலங்கின் கால்தடம் புணுகு பூனை, காட்டுப்பூனை, சிறுத்தை பூனையாக இருக்கலாம் எனவும், கால் தட ஆய்வுக்கு பின்னரே அது எந்த மாதிரியான விலங்கு என தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப்பகுதி யில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொட்டபெட்டா சாலையில் போக்குவரத்து நெரிசல்
உதகை, ஜூன் 23- வார விடுமுறையை முன்னிட்டு தொட்ட பெட்டாவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை நாட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களைக் காண வருகை புரிகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு காரணமாக 2 ஆவது முறையாக மூடப்பட்ட தொட்டபெட்டா சிகரம் சனியன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதையொட்டி, வார விடுமுறை நாளான ஞாயிறன்று உதகை தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். தொட்டபெட்டா மலை சிகரம் சென்ற சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி மூலம் மலைகள், பள்ளத் தாக்குகளை கண்டு ரசித்தனர். குறிப்பாக, மலைச்சிகரத்தில் இருந்து தெரியும் உதகை நகர வனப்பகுதிகள், கோவை, மேட்டுப்பா ளையம் மற்றும் மலைகளில் தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் அதையும் பொருட்படுத்தாமல் வாகன நெரிசலில் காத்திருந்து தொட்ட பெட்டா செல்ல மலைச்சிகரத்திற்கு வருகை புரிந்தனர். இதேபோல், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது.