districts

img

கட்சி சின்னம் பொறித்த துண்டுக்கு மவுசு...

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின் னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்ளர்கள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. தேர்தல் காலங்களில் தங்கள் கட்சி யின் சின்னங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், கட்சியின் கொடிக்கு ஏற்ற வகையில் உள்ள வண் ணங்களில் மப்ளர்களும், துண்டுகளும் தயாரிக்கப்படுவதுடன், அவற்றில் அரசி யல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப் பட்டு உள்ளது. இந்த வகை துண்டுகள் அதி களவில் விற்பனையாவதாலும், தேர்தல் நேரம் என்பதாலும், இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காக தற்பொழுது தீவி ரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வரு கிறது. தங்களை அரசியல் கட்சியின் அடை யாளமாக காட்டிக் கொள்ளும் இந்த துண்டு கள் மாற்று கட்சியினர் தங்கள் கட்சியில் இணையும் பொழுது வரவேற்கும் விதமாக வும், அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. குமாரபாளையத்தில் தயாரிக்கப்படும் மப்ளர், துண்டுகளை இந்தியா முழுவ தும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக ஆர்வத்துடன் வந்து நிறுவனத்திடம் மொத்தமாக வாங்கி செல்வது அதிகரித் துள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்ப தால் அரசியல் கட்சிகளின் தேவைக்காக உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துள் ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள் ளனர்.