மே.பாளையம், டிச.11- மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படு வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலை யத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக் கப்பட்டு வருகிறது. இந்த, மலை ரயிலில் செல்ல ஏராள மான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கம். ஆனால், மழை காலங்களில் இதன் இருப்பு பாதையில் ஏற்ப டும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல், அடிக் கடி தடைபட்டு நிற்கிறது. கடந்த நவ. 1 ம் தேதி முதல் இம்மாதம் டிசம்பர் வரை என சுமார் 6 வார காலத்தில் 6 நாட்கள் மட்டுமே மலை ரயில் போக்குவரத்து நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் நவ. 3 ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலைர யில் கடந்து செல்லும் பாதையில் கல்லார் ரயில் நிலை யம் முதல் அடர்லி ரயில்நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால், நவ.4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை என 4 நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நவ. 8 ம் தேதி போக்குவரத்து துவங் கியது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் தொடர் மழை பெய்து, மலைரயில் பாதையில் மீண் டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், நவ. 9 ம் தேதி முதல் நவ.18ம் தேதி வரை என 9 நாட்கள் தொடர்ச்சியாக மலைர யில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த நவ.19 தேதி மீண் டும் இயக்கப்பட்ட மலைரயில், தொடர் மழை மற்றும் மண்சரி வால் நவ. 22 ம் தேதி முதல் டிச. 10 ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மேட்டுப்பாளையம் மற்றும் இதனைச் சார்ந்த மலைப்பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்வ தால், மண் சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மீண்டும் வரும் டிச.13 ம் தேதி வரை இதன் சேவை ரத்து செய்யப்ப டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்ப டும் மண்சரிவு பாதிப்புகளால் உலக புகழ் பெற்ற நீலகிரி மலை ரயில் சேவை தொடர்ச்சியாக 22 நாட்கள் ரத்து செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்து இதில் பய ணிக்க ஆவலுடன் காத்திருந்த சுற்றுலா பயணிகளை ஏமாற்ற மடைந்தனர்.