districts

img

காட்டாற்று வெள்ளத்தால் மலைவாழ் மக்கள் தவிப்பு

தருமபுரி, ஆக.21- அரூர் அருகே உள்ள கலசப்பாடி செல்லக்கூடிய மலைப்பகுதியில் உரு வான காட்டாற்று வெள்ளத்தால் ஆற் றைக் கடந்து செல்ல முடியாமல் 7 கிரா மங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் கனமழை பெய்து வருகிறது. அரூர் அருகே உள்ள சித்தேரி மலைப்பகுதியான கலசப்பாடி, அரசநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் உருவெடுத்து, மலைகளின் இடுக்குகள் வழியாக மழை நீர் பாய்ந்து ஓடுகிறது. வாச்சாத்தி பகுதி யின் அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக செல்லக்கூடிய அரசநத் தம், கலசப்பாடி, அக்கரைக்காடு உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங் கள் குடியிருப்புகளுக்கு ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்து வரு கின்றனர். ஏற்கனவே இந்த மலைப்பகுதிக்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வரும் நிலையில், மழைக்காலங் களில் இங்குள்ள மக்கள் இதுபோன்று சிரமங்களுக்கு உள்ளாகி வருவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில், தார்ச் சாலை மற்றும் ஆற்றை கடந்து செல்ல  பாலம் அமைக்க வேண்டும் என மலை வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.