கோவை, டிச.24- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியுடன் சனியன்று புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உயிரி தொழில்நுட்பம், உணவு பதப்ப டுத்துதல் மற்றும் தொலையுணர்வு தொழில் நுட்பம் ஆகியவற்றில் புதிய ஆராய்ச்சிகளும் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் பயிற்சி ஆகிய வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப மேம் பாட்டில் இணைந்து செயல்பட இரு நிறு வனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப் பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.தமிழ்வேந்தன், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம மாள் மகளிர் கல்லூரி சார்பில் பி.மீனா, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.கீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டனர். வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கு நர் இ.சோமசுந்தரம் இந்நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்து ஏற்பாடுகளை செய்தார்.