சேலம், அக்.24- சேலம் மாநகரில் பெய்த கன மழையால், சாலையில் பெருக்கெ டுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் கீழே விபத்து, காய மடைந்தனர். வடகிழக்கு பருவமழை துவங் கிய நிலையில், தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத் திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிப் புக்குள்ளாகி வருகின்றனர். இந்நி லையில், வியாழனன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்த நிலையில், சாரல் மழையாக துவங்கி ஒரு மணி நேரத் திற்கு மேலாக கனமழையாக பெய் தது. குறிப்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளை யம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் மழை பெய்தது. சேலம் - கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெ டுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும், சாலையில் இருபுற முள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக் குள் மழைநீரும், சாக்கடை நீரும் புகுந்தது. இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டும், குழியு மாக உள்ள இடத்தை அறியாமல் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை சரி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந் துள்ளது. கோவை கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், பல் வேறு பகுதிகளில் வெள்ள நீர் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பொதுமக்களும், மாணவர் களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளா கினர். இந்நிலையில், கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத் தூர், நரசிபுரம், வடவள்ளி, மருத மலை, பேரூர், துடியலூர், கவுண்டம் பாளையம் வியாழனன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப் பட்ட வானம் பிற்பகலில் திடீரென சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், சிறுவாணி செல்லும் பிரதான சாலை பேருந்து நிறுத்தம் அருகே மாதாம்பட்டியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளித்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு குள்ளாகி அந்த சாலையை கடந்து செல்கின்றனர். உதகை இதேபோன்று, வியாழனன்று உதகை, கோத்தகிரி உட்பட பல இடங்களிலும் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தின் பல இடங்க ளில் இரவு வரை மழை பெய்து கொண்டிருந்தது. உதகையில் சவுத் வீக் பகுதியில் இருந்து வந்த மழை நீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிலைய சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்துக்கு வாக னங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு சில வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன. மேலும், பேருந்து நிலை யம் அருகில் உள்ள ரயில்வே பாலம் உள்பட பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.