நாமக்கல், செப்.9- பள்ளிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின் றனர். விரைந்து இப்பணிகளை முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையத்தில் சென்னை- கன்னியா குமாரி தொழிற்தட திட்டத்தில் சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. திருச் செங்கோடு மற்றும் சங்ககிரி சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு, பிரதான சாலை பகுதிகளில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பால தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடிக்கடி வாகன போக்குவரத்து நெரி சல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால், அவசர பணிக்காக செல் வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வோர் என பல தரப்பினரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி பாளையம் ரவுண்டானாவில் உள்ள மிகக் குறுகலான சாலையில் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஈரோட்டில் இருந்து பள்ளி பாளையம் வரும் பேருந்துகள் மற்ற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்வதற்காக பேருந்துகளை சாலை யில் நிறுத்தும் பொழுது, பின் தொடர்ந்து வரும் வாகனங்கள், குறுகலான சாலை யில் செல்ல முடியாமல் தேங்கி நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் ஒரு சில வாகன ஓட்டிகள் பிரதான சாலையை பயன்படுத்தாமல், குறுக்கு சாலையில் வாகனங்களை செலுத்து வதினாலும், குறுக்கு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு வாகனங் கள் வரும் பொழுது வெளியே செல்ல முடியாமல் நடு சாலையில் வாகனங் கள் நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டு வருகிறது. எனவே, வாகனப் போக்குவரத்து மிகுந்த நேரங்களில், கூடுதலான போக்குவரத்துக் காவலர்களை நியமித் திட வேண்டும். மேலும் பிரதான சாலை களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம் பால தூண்கள் அமைக்கும் பணி மற்றும் சாலை விரிவாக்க பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை யாக உள்ளது.