ஈரோடு, ஜன. 9 – அரசு போக்குவரத்து ஊழி யர்களின் வேலை நிறுத்த போராட் டம் துவங்கியது. பெரும்பாலான ஊழியர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைகளை வழங்க வேண்டும், பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும், 94 மாத டிஏ நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திட்டமிட்டபடி செவ்வா யன்று வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோடு மண்டலம், சத்தியமங்கலத்தில், சிஐடியு மண்டலத் தலைவர் கே.மாரப்பன் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு கிளை 1,2.,3 பணிமனைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மண்டலச் செயலாளர் ஜான்கென் னடி மற்றும் இளங்கோ, ஓய்வு பெற்ற அமைப்பின் நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நம்பியூர் பணிமனை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில், சிஐடியு மண்டலப் பொருளா ளர் அய்யாசாமி மற்றும் ரங்கசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அந்தியூர், கவுந்தப்பாடி, பவானியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பெருந்துறையில் ஏடிபி தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு ஜெக நாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இதேபோன்று கோபிச்செட்டிபா ளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை கோவை மாவட்டத்தில் 70 சத விகிதத்திற்கு அதிகமான அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை சுங்கம், கவுண்டம் பாளையம், உக்கடம் உள்ளிட்ட போக்குவரத்து பணிமனை முன் பாக சிஐடியு, ஏடிபி உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமா னோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், சிஐடியு அரசு போக்குவ ரத்து கழகத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம், தலைவர் வேளாங்கண் ணிராஜ் மற்றும் ஏடிபி, ஏஐடியுசி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற னர். பொள்ளாச்சியில், ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் தலைவர் சேது ராமன், ஓய்வுபேற்ற பணியாளர்கள் அலுவலர்கள் சங்க நாச்சிமுத்து உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.