சேலம், மார்ச் 16- சேலத்தில் 25க்கும் மேற்பட் டோர் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். சேலம் மாவட்டம், ஜலகண்டா புரம் பேருந்து நிலையத்தில் மார்க் ்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்டக்குழு உறுப்பினர் கே. ராஜாஜி தலைமையில் நடைபெற் றது. ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.ராஜேந்திரன் வரவேற்புரையாற் றினார். இதில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். இதைத்தொடர்ந்து, நங் கவள்ளி பேரூராட்சி தேர்தலில் அம் பேத்கர் நகர் பகுதியிலிருந்து கவுன் சிலராக வெற்றி பெற்ற சுரேந்திரன் தலைமையில் 25க்கும் மேற்பட் டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் கே.பாலகிருஷ்ணன் முன்னி லையில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு தலைவர் கள் செந்துண்டு அணிவித்து வர வேற்றனர். இந்நிகழ்வில், மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.நாகைமாலி எம்.எல்.ஏ, எடப்பாடி தாலுகா செயலா ளர் பெரியண்ணன், மேச்சேரி ஒன் றிய செயலாளர் எஸ்.மணிமுத்து, கொங்கணாபுரம் ஒன்றிய செயலா ளர் எஸ்.முத்துசாமி, மேட்டூர் நகரம், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி, சங்ககிரி தாலுகா செய லாளர் ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.