districts

img

மாநில அளவிலான கராத்தே போட்டி

சேலம், மார்ச் 9- மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சேலத்தைச் சேர்ந்த  20க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல்  மூன்று இடங்களை வென்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தாரமங்கலம் அர்ஜுன் மாஸ்டரின் மாணவர்கள் 30க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்  திருக்குமரன் 2 ஆம் பரிசும், விக்னேஷ் 3 ஆம் பரிசும், பெண்கள்  பிரிவில் சுமித்ரா 3 ஆம் பரிசும் வென்றனர். 16 வயதிற்கு உட் பட்டவர்களுக்கான பிரிவில் 11 பேர் முதல் பரிசும், 8 பேர் இரண் டாம் பரிசும், 5 பேர் மூன்றாம் பரிசும் வெற்றி பெற்றனர். இதில் பயிற்சியாளர் அர்ஜூன், இராமிரெட்டிபட்டி  தலைமை பயிற்சியாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.