கோவை, மே 20- சூலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் மயானம் அருகே உள்ள நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வதம் பசேரி ஊராட்சிக்குட்பட்ட நல்லூர்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 100க்கும் மேற் பட்டோர் ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர். குறிப்பாக, அப்பகுதியில் மயானத்திற் காக 19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனி டையே மயானத்திற்கு 3 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள இடத்தில், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுவரை வரு வாய்த்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சனியன்று 100க்கும் மேற் பட்ட பெண்கள் மயானம் அருகே உள்ள இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடு பட்டனர். முதற்கட்டமாக, அந்த நிலத்தை சுத்தம் செய்து வரும் பெண்கள், குடிசைகள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள் ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதி காரிகள் மற்றும் காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.