உதகை, ஏப்.11- நீலகிரி மாவட்டத்தில் கட்டு மான பொருட்கள் விலை உயர்வு காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை இழந்துள்ளனர். நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிக ரித்து கொண்டே செல்கிறது. சம வெளி பகுதிகளை காட்டிலும் நீல கிரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுகிறது. இந்நிலையில், திங்க ளன்று நிலவரப்படி உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 பைசா அதிகரித்து ரூ.112.29க்கும், டீசல் 76 பைசா அதிகரித்து ரூ.102.04க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட் ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை வாகனங்கள், சரக்கு வாக னங்கள் கட்டணம் அதிகரித்துள் ளது. இது தவிர கட்டுமான பொருட் கள் விலையும் உயர்ந்துள்ளது.
எம்.சாண்ட் ஒரு யூனிட் ரூ.6,500
நீலகிரியில் சுற்றுச்சூழலை பாது காக்க மலை பாதுகாப்பு விதிமுறை கள் அமலில் உள்ளது. இதனால் செங்கல், மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் மேட்டுப் பாளையம் மற்றும் பிற மாவட் டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பைவிட தற்போது கட்டுமான பொருட்கள் விலை திடீ ரென உயர்ந்துள்ளது. இதுகுறித்து உதகையைச் சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், உதகையில் ஒரு செங் கல் ரூ.12-ல் இருந்து ரூ.13 ஆக விலை உயர்ந்துள்ளது. எம்.சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரத்து 500 ஆக வும், ஆற்று மணல் ஒரு யூனிட் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிர மாகவும், 50 கிலோ சிமெண்ட் மூட்டை ரூ.430ல் இருந்து ரூ.460 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 ஆகவும் விலை உயர்ந்துள் ளது.
10 ஆயிரம் பேர் வேலை இழப்பு
இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாடகை கட்டணம் உயர்ந்ததே ஆகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு லாரியில் கட்டுமான பொருட்கள் கொண்டு வர ரூ.7 ஆயிரத்து 500 வாடகை இருந்தது. எரிபொருள் விலை உயர்ந்ததால் ரூ.1,500 ரூபாய் அதிகரித்து ரூ.9 ஆயிரம் வாடகை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் வெளியிடங்களில் இருந்து உதகைக்கு வரும் கட்டு மான பொருட்கள் அளவு குறைந்து இருக்கிறது. இதனால் அதை நம்பி பணிபுரிந்து வரும் ஓட்டுநர் கள், தொழிலாளர்கள் என 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இந்த நிலை நீடிக்குமானால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள் அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கள் வலியுறுத்தி உள்ளனர்.