திருப்பூர், அக். 2 - கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 செல்லாது என்று பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் செய்தது போல், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் செல்லாதவராக மாற்ற, மோடி நீக்கம் செய்து நாட்டை யும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கூறி னார். திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று நடத் திய நடைபயண இயக்கத்தின் நிறை வாக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங் கேற்று மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாட் டில் மதவெறி தூண்டிவிடப்பட்டு மக்கள் ஒற்றுமையை பாஜக ஆர்எஸ்எஸ் சிதைக்கிறது. வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருந்த திருப்பூர், பாஜக ஆட்சிக் காலத்தில் வேலையின்மையை சந்திக் கிறது. இங்கு தொழில் நடத்தியவர்கள் நெருக்கடியில் சிக்கி சொந்த ஊருக் குச் செல்லும் நிலையை மோடி ஏற்ப டுத்தி விட்டார். சாதி, மத அடையாளங்களுக்கு அப் பாற்பட்டு இந்த நாட்டின், நாட்டு மக்க ளின் அடிப்படை வாழ்க்கைப் பிரச்சனை களுக்காக வெண்கொடி ஏந்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் களம் காணுவது இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்ப டுத்துகிறது. வரக்கூடிய 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நீக்கம் செய்து அவரை பதவியை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அருள், காந்தி ஜெயந்தி கொண்டாடுவ தற்கு காவல் துறை அரசியல் பேசக் கூடாது என்று அனுமதி மறுக்கிறது. நாட்டு விடுதலை, அரசியல் சுதந்திரம் பெறத்தான் காந்தி போராடினார். அவ ரது பிறந்த நாளில் அரசியல் பேசக்கூ டாது என்று காவல் துறை தடுப்பதை வாலிபர் சங்கம் ஏற்காது, இதை அனும திக்க முடியாது. இதற்கு தடை விதிக்கும் காவல் துறையினர், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பல நாட்களுக்கு நகரில் போக் குவரத்தை பாதிக்கச் செய்து, மக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தியபோது அதைத் தடுக்க, கட்டுப்படுத்த எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. லிபிய நாட்டின் விடுதலைப் போராட்ட தலைவர் ஒமர் முக்தார் படத் தைத் திரையிட்டால் அதை தடுக்க வேண்டும் என்று பாஜகவினர் காவல் துறையிடம் கூறுகின்றனர். ஒமர் முக்தார் இத்தாலி பாசிஸ்ட் முசோலினியை எதிர்த்துப் போராடியவர். முசோலினி, ஹிட்லரின் வாரிசுகளான இவர்களுக்கு அச்சம் வரத்தான் செய்யும் என்றார்.