districts

img

கங்கையில் குளித்தாலும் மோடியின் பாவம் விலகாது

கே.சுப்பராயன் சாடல் கோபி, மார்ச் 22- பதினேழு கங்கையில் குளித்தா லும் மோடி செய்த பாவம் விலகாது என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் சாடி னார். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனடிப்படை யில், திருப்பூர் நாடாளுமன்ற தொகு தியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் கே.சுப்பரா யன் தொகுதி முழுவதும் உள்ள கூட் டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் மற் றும் வாக்குசாவடி முகவர்களை நேரில் சந்தித்து, தேர்தல் பணிகள் மேற் கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வெள்ளியன்று ஈரோடு  மாவட்டம், கோபிசெட்டிபாளையத் தில் திமுக சார்பில் வேட்பாளர் அறி முகம் மற்றும் அனைத்து நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி, திமுக மாநில துணைச்செயலாளர் அந்தி யூர் செல்வராஜ் கலந்து கொண்டு, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயனை அறி முகபடுத்தினர். தொடர்ந்து, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை களை வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, திமுக தலைமையிலான அரசு மக்களுக்கான பல்வேறு திட் டங்களை செயல்படுத்தியுள்ளது. திமுக அரசின் திட்டங்களில் இல வச பேருந்து, மகளிருக்கான உரிமை தொகை, பெண் கல்வியை ஊக்கு விக்க மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகி றார். தமிழகம் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டபோது மக்கள் நலன் கருதி துறைச் சார்ந்த அனைத்து அமைச் சர்களையும் நேரடியாக சென்று, பணியை மேற்கொள்ளுங்கள் என ஆலோசனைகளை வழங்கி மக்கள் பணி மேற்கொள்ளப்பட்டது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தி னர் அனைவரும் ஒருங்கிணைந்து வீடு வீடாக சென்று முதல்வரின் திட்டங் களை எடுத்துக்கூறி, வாக்கு சேகரிப் பில் ஈடுபட வேண்டும், என்றார்.  இதனைதொடர்ந்து பேசிய திருப் பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பா ளர் கே.சுப்பராயன், மோடி ஆட்சியில் ஜனநாயகம் செத்து விட்டது. மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் வரை, ராணுவத்தினரை அனுப்பி கைது செய்துள்ளது, ஹிட்லரின் செயலை போன்றுள்ளது. தேர்தல் கமிஷன் என்ற அமைப்பையே, அதி காரமற்ற அமைப்பாக மாற்றி அமைத் துள்ளனர். சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஆபத்து எப்போதும் நடந்த தில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் விரோத போக்கையே கடை பிடித்து வந்த மோடி, 17 கங்கையில் குளித்தாலும் அவர் செய்த பாவம் விலகாது, என்றார்.  இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச லம், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றி யச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.